Saturday, May 30, 2009
போடுங்க. அண்ணன் ‘அஞ்சாநெஞ்சன்‘ ‘மதுரை மயிலேறி கேபினட் மந்திரியா டெல்லிக்கு போயிட்டாரு. தம்பி ‘தளபதியோ‘ தமிழகத்தை சுத்திவந்து ‘துணை முதல்வரா‘ ஆயிட்டாரு! ஆகமொத்தம்..தி.மு.க. இளைஞரணி இப்போ ‘ஹேப்பி சுந்தராம்பாளா’ மாறி பாடற லேட்டஸ்ட் ரீமிக்ஸ் பாட்டு.. ‘‘பலம் நீயப்பா!’’
எல்லாம் ‘கலைஞர் துணை’! ‘தளபதி’ இப்போ ‘துணை
மன்னராகி’விட்டார். மாத்துக்கருத்துள்ளவங்க கூட சமயத்துல ஏத்துக்கற ‘அரசியல் விமர்சகர்’ சோ சொன்னாரு..‘‘முதல்வர் பதவிக்கு தகுதியானவர் மு.க.ஸ்டாலின்!’’னு!
ஸோ..அடுத்த பாரா ப்ளீஸ்.
‘முதல்வர் மகன்‘..‘தளபதி’ங்கற ஒளிவட்டமெல்லாம் இல்லாம படுஎளிமையா இருக்கற மு.க.ஸ்டாலினை ஒரு பத்திரிகையாளர்ங்கற முறையில பலமுறை சந்திச்சிருக்கேன். அக்டோபர் 1996. சென்னை மாநகர மேயராகிறார் மு.க.ஸ்டாலின். ‘முதல் பேட்டி‘ ‘குங்குமம்’ பத்திரிகைக்காக எடுத்தவன்ங்கிறதால என்னை எப்பவுமே ஞாபகம் வெச்சுருப்பார். அன்னிக்கு கவர்னரை பாத்துட்டு பவர்ஃபுல்லா கோபாலபுரம் இல்லத்துக்கு வர்றாரு.
வந்து குவிஞ்ச மாலைகள்.சால்வைகளை பாத்து தொண்டர்கள் மத்தியில ‘‘பனகல் பார்க்ல இதைவெச்சே பூக்கடையும்,துணிக்கடையும் ஆரம்பிச்சுரலாமே’’னு ஆனந்தமா முனகல் கேக்குது. மதியம் ஒரு மணி. பெருமையா வாழ்த்தின அத்தனைபேரையும் பொறுமையா அனுப்பிச்சுட்டு நம்ம பேட்டிக்காக ரெடியானார் ஸ்டாலின்.
கூடவே ஸ்டாலினின் அன்பு நண்பர் ‘அன்பில்‘ பொய்யாமொழி!
‘முரசொலி‘ ஃபோட்டோகிராபர் ராஜேஷ் கிறிஸ்டோபர் ‘ப்ரூஸ்லீ‘‘ மாதிரி நின்னு கூட்டத்தை விலக்கி உள்ளே கூட்டிட்டுப் போனார். அண்ணா..ஸ்டாலின் டைமிங்கா ஜோக்
அடிப்பார்னு சொன்னா நம்பமாட்டீங்க!
என்னைப் பாத்ததுமே பொய்யாமொழி ‘‘உதயசூரியன்
வந்துட்டாரு!’’ன்னாரு. உடனே ஸ்டாலின் ஜாலியா ‘‘உதயசூரியனாலதான வந்தோம்!’’னாரு உள்ளர்த்தத்தோட! சுத்தியிருந்த அத்தனைபேரும் ‘‘ஹோ‘னு சிரிச்சோம். கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தோட்டா ஸ்பீடுல பதில் சொன்னாரு ஸ்டாலின்.
அப்புறம் கேஷுவலா ‘‘எந்நேரமும் பரபரப்பா இருக்கற அரசியல் வி.ஐ.பி.கள் மேல ‘குடும்பத்தை கவனிக்க அவருக்கு நேரமில்லை’னு ஒரு பொது புகார் இருக்கே! நீங்க எப்படி?’’ன்னேன். ‘‘வேணாம் வம்பு’’ன்னு ‘மோனாலிஸா ஸ்மைலோட’
ஸ்டாலின் சொன்னாரு..‘‘உண்மைதான். தலைவர் கலைஞருக்கு நாங்க படிக்கற காலத்துல என்ன படிக்கறோம்,என்ன செய்றோம்னு பாக்க நேரம் இருந்ததில்ல. அதே பழக்க
வழக்கம்தான் எனக்கும் வந்துருச்சு!’’ன்னார்.
அந்த பேட்டியிலும், அடுத்தவாட்டி சந்திச்சப்பவும் ஸ்டாலின்கிட்ட ‘விளாட்டா’ நான் கேட்ட இன்னொரு ‘கலாட்டா’ கேள்வி..‘‘உங்க இளமையோட
ரகசியம்தான் என்ன?’’ அதுக்கு அவர் வெச்சிருக்கற ‘எவர்க்ரீன்’ பதில்..‘இதுக்காக தங்கபஸ்பமா சாப்பிடமுடியும்? என்னோட உடல்வாகு அப்படி அமைஞ்சிருச்சு.
கூடுமானவரை காலைல எக்சர்சைஸ் பண்றேன். ஆனா எனக்குத் தெரிஞ்ச ரகசியத்தை
சொன்னா சிரிப்பீங்க. நேரத்துக்கு சாப்பிடறதில்ல..தூங்கறதில்ல! ஒருவேளை இதுதான்
சரியான காரணமோன்னு நினைக்கிறேன்!’’னு சொல்லி சைலன்ட்டா சிரிச்சார்.
இன்னும் நினைச்சு சிரிக்கற இன்னொரு சந்திப்பு இது. ‘குங்குமம்’ இதழில் ‘பயணச்சிறகுகள்’ங்கற தலைப்புல தன்னோட வெளிநாட்டு பயண அனுபவங்களை மு.க.ஸ்டாலின் தொடரா எழுதினாரு. அதுல ஒரு வாரம்..மிக முக்கியமான ஒரு தகவலை சேக்கறதுக்காக வரச்சொல்லியிருந்தாரு. உடனே போனேன்.
நீட்டா டி.டி.பி. பண்ணிவெச்சிருந்த அந்த கட்டுரையை என்கிட்ட குடுத்தாரு. அப்படியே ‘‘உதயசூரியன்..‘பயணச்சிறகுகள்’ படிக்கறீங்களா?’’ன்னாரு. ‘‘தவறாம படிக்கறேன் சார். பல தகவல்களோட எழுதறீங்க. புது வாசகர்கள்கிட்டேர்ந்து நிறைய லெட்டர்ஸ் வருது சார்’’னேன்.
பதிலுக்கு ஸ்டாலின் ‘‘அப்படியா? அதெல்லாம் ஒருவேளை நம்ம இளைஞரணி தம்பிகள் எழுதினதா இருக்கப்போகுது!’’னு சிரிச்சுகிட்டே சொல்ல..‘இவ்ளோ நுட்பமா கவனிக்கறாரே’னு நானும் ‘கப்சிப்’பா சிரிச்சேன். அப்புறமா ‘‘அந்த லெட்டர்ஸோட சேர்த்து.. ‘குங்குமம்’ ரெகுலர் வாசகர்கள் எழுதறதையும் குடுங்க!’’ன்னாரு அவருக்கே உரிய புன்னகையோடு.
ஒரு கவுன்சிலரே கும்பலா அடிப்பொடிகளோட வர்றப்போ..அந்தமாதிரி படையோட வந்து கடுப்படிக்காம..சிம்பிளா நடைபோட்டு வந்து நகர மக்களை ஈஸியா நகரவெச்சவரு ஸ்டாலின்! சென்னைல மேம்பாலங்கள் கட்டப்பட்டப்போ..
எல்லாரும் ‘குதிகாலை தூக்கி ஜாக்கிங் செய்ற அதிகாலைலயே‘ அதிகாரிகளோட வந்து
ஸ்பாட் விசிட் பண்ணிட்டு சைலன்ட்டா போயிடுவாரு.
இப்படித்தான் ஒருமுறை..கோடம்பாக்கம் மேம்பால கட்டுமானப் பணிகளை பார்வையிட வந்தாரு. அஞ்சாறு அதிகாரிகள் மட்டுமே கூட இருந்தாங்க.
கொஞ்சம் தள்ளி தனியா வந்து பாலத்தோட மறுபுறத்தை பார்வையிட்டாரு. அப்போ அங்கிட்டு நடந்துபோன ரெண்டுபேர் ‘டி.ஷர்ட்..ட்ராக் சூட்‘ போட்டு ஸ்டைலா நின்னுருந்த ஸ்டாலினை பாத்துகிட்டே ‘‘மு.க.ஸ்டாலின் மாதிரியே இருக்கார்ல!’’னு சொல்றாங்க.
இதை கேட்டதுமே ஸ்டாலின் சிரிச்சுகிட்டே ‘‘அதே
ஸ்டாலின்தாங்க நான்!’’னு சொல்ல..‘‘வணக்கம் சார்..ஸாரி சார்’’னு அந்த பாதசாரிகள் உளறி குளறுனது சுவாரஸ்யமா இருந்துச்சு. வேறென்ன தலைவா..டைட்டிலுக்கு மேட்ச்சா இந்த மேட்டர் ஆச்சா!