Monday, June 29, 2009
கலைஞானி கமல் பத்தி கடந்த பதிவுல ‘ஏதோ ஊதுபத்தி‘ அளவுலதான் சொல்லிட்டமோனு மனசுக்குள்ள ஒரு யோசனை வாசனையா புகையுது!
இப்போதைக்கு கமல் ‘நரை, திரை, மூப்பு‘ கடந்த புத்தர்! இன்னும் கொஞ்சம் பழுத்தா இவரே ஒரு சித்தர்! ‘கிண்ணத்தில்‘ தளும்பறதை பாத்ததுமே சிலபேரு தத்துவமா புலம்பறதை கேட்டிருப்போம். ஆனா நாம கேட்ட கேள்விக்கு தன் எண்ணத்தில் பட்டதை பட்டென சொல்லி அசத்தற அசாத்திய திறமைசாலி கமல்!
கேள்விக்குறியை ஆச்சரியக்குறியா மாத்தற கமலிடம் ஒரு கேள்வி கேட்டாங்க..‘காலையில் எழுந்ததும் யார் முகத்தில் விழிப்பீர்கள்?’. ‘பாசாங்கா ஒரு பதிலைச் சொல்லி ‘பேஷா இருக்கே‘னு கமல் பேர் வாங்கியிருக்கலாம்! ஆனா ‘அதிமேதாவிகளையே வெள்ளாவியில போட்டு வெளுக்கறமாதிரி‘ அப்பட்டமா இப்படி பதில் சொன்னார்
கலைஞானி..‘‘காட்டில் இருந்தால் நரி முகத்தில். கட்டிலில் கிடந்தால் ஸ்திரி முகத்தில்!’’
சிரிச்சுகிட்டு பேசறப்போ கூட கமல் நம்மளை பிரிச்சு
மேஞ்சுருவாரு! ‘விருமாண்டி‘ ப்ரஸ்மீட். நடுநாயகமா ‘மருதநாயகம்‘ உக்காந்திருக்காரு.
இடம், வலமா இருந்த நிருபர்கள் படம் பத்தி கேக்கறோம். அப்போ நான் என் பங்குக்கு ‘‘விருமாண்டிக்காக ரெண்டு காளைகளை பயங்கரமா வளக்கறீங்களாமே?’’ன்னேன். உடனே வாய்விட்டு சிரிச்ச கமல் ‘‘ஐயையோ..பயங்கரமால்லாம் வளர்க்கலீங்க! புண்ணாக்கு,
தீவனம்னு போட்டு சாதாரணமாதான் வளர்க்கறோம்!’’னு சொல்ல..தறிகெட்டு சிரிச்சோம்.
‘சிஃபி.காம்‘க்காக எனக்கு கமல் ‘சிறப்புப்பேட்டி‘ தந்தப்போ.. உறைப்பா ஒரு கேள்வி கேட்டேன். ‘‘மகாநதி‘ பட வில்லன் மாதிரி நிஜத்துல யாராவது தன்னோட கையையே வெட்டிக்குவாங்களா?’ன்னேன்.
‘‘இதைவிட கொடூரமால்லாம் சம்பவம் நடந்துருக்குங்க. எங்க ஊர்ல ஒருத்தனோட கையை எதிராளிங்க பாதி வெட்டிட்டாங்க. உடனே அவன் என்ன பண்ணான் தெரியுமா? அதே கையை முழுசா வெட்டி..அதை இன்னொரு கையில எடுத்துகிட்டு ரத்தக்களறியா சண்டை போட்டிருக்கான்!’’னு கமல் சொல்ல..கைகட்டி கேட்டுகிட்டேன்.
எனக்கு ரொம்பநாளா ஒரு டவுட்டு! ‘எப்பவுமே பிஸியா இருக்கற கமல் தனிமையா இருக்கும் சமயங்கள்ல என்ன செய்வார்?‘. நாக்குல நின்ன கேள்வியை போறபோக்குல கமல்கிட்டயே கேட்டுட்டேன்.
‘‘என்னை தட்டி எழுப்பற கேள்வி இது. என்ன..புரியலைங்களா? நண்பர்கள்கூட இல்லாத ஒரு தனிமை கிடைச்சுதுன்னா..உடனே நான் கண்மூடி
தியானத்துல ஆழ்ந்துருவேன்! ‘ஆஹா..கமல் தியானம்‘னு கவர்ஸ்டோரி கிடைச்சுருச்சுனு அவசரப்பட்டு முடிவு பண்ணிராதீங்க!’’னு சஸ்பென்ஸா சிரிச்சாரு கமல்.
சில ‘டிக்டிக்டிக்‘குக்கு பிறகு அவரே ‘டக்‘குன்னு சொன்னாரு..
‘‘தியானம்னு சொன்னது வேறெதுவுமில்ல..நல்லா நிம்மதியா தூங்குவேன்! சான்ஸ்
கிடைச்சா கொடைக்கானல் போயிருவேன். அப்படியே மலைக்குள்ள ஒரு இலை மாதிரி கிடந்து சுகமா தூங்கிருவேன்!’’னாரு ‘தமிழ் சினிமாவை விழிக்கவெச்ச இந்த மகா
கலைஞன்‘!
அதுசரி ‘நம்மவர்களே‘! இந்த பதிவுல போட்டுருக்கற கமல்
ஃபோட்டோ எப்போ..எதுக்காக எடுக்கப்பட்டதுன்னு கரெக்ட்டா சொல்ற ‘மர்மயூகி‘களுக்கு ஸ்ரீதர் சார் ‘சிரிப்பு பரிசு’ வழங்கறார் என்பதை ‘ஏழ்மையுடன்‘ தெரிவிச்சுக்கறேங்க!