Showing posts with label காமெடி. Show all posts
Showing posts with label காமெடி. Show all posts

சிரிப்பு ரிப்பீட்டேய்!

Saturday, August 1, 2009

வெரைட்டியாக பல வெற்றிப்படங்கள் தந்து மிரட்டிய டைரக்டர் அவர்! ஊரும் வேண்டாம்..பேரும் வேண்டாம். மேட்டர் மட்டும் போதுங்ணா!

‘கல்லிலே கலைவண்ணம் கண்ட‘ மாமல்லபுரத்துக்குப் பக்கத்தில் ‘ஃபுல்லிலே கதைவண்ணம் கண்ட‘ நம்ம டைரக்டர் தங்கியிருக்கற ஒரு ரிசார்ட். சிலுசிலுன்னு காத்தும்..குளுகுளுன்னு ஏ.சி.யும் கலந்து கலக்கற கடற்கரையோர ரூம். அடுத்த படத்துக்கான பட்டறையை போட்டு..கதையை பட்டை தீட்டிக்கிட்டிருக்காரு டைரக்டர்.

பொழுது சாஞ்சாலே பல ‘இறக்குமதி சரக்குகளை‘ உள்ளே ‘இறக்கிகிட்டு‘ பொழுதுபோக்கறது நம்ம டைரக்டரோட வழக்கம். அன்னிக்கும் வழக்கம்போல ஜாலியா பல ‘லார்ஜ்‘களை காலி பண்ணினதோட விளைவு..அடுத்தநாள் காலையில டைரக்டரோட வயிறு செம ‘லார்ஜாகி‘ அப்செட் ஆயிருச்சு.

‘சரக்குக்கு முறுக்கு‘ முதல்..‘வீட்டுக்கு பலசரக்கு‘வரை வாங்கிவந்து சேர்க்கிற டிரைவர்தான்..அன்னிக்கும் கூடவே இருந்தாரு. விடிஞ்சதிலேர்ந்தே அஜீரணக் கோளாறால ‘வயித்துக்குள்ள வன்முறை‘ நடக்கிறதை தாங்கமுடியாத டைரக்டர்..தன்னோட டிரைவரைக் கூப்பிட்டு ‘‘கடைக்குப் போயி ‘ஜெல்யூஸில்‘ வாங்கிட்டு வாப்பா‘‘ன்னாரு!

‘மிட்டாய் வாங்கப் போற சிறுவன் மாதிரி‘ சிட்டாய் பறந்தார் டிரைவர். ரெண்டு மணி நேரமாகியும் போன டிரைவர் வரவே இல்லை. டைரக்டரோ.. வயித்தெரிச்சல், நெஞ்செரிச்சலோட சேர்ந்து ஏகப்பட்ட எரிச்சலோட காத்துக்கிடக்காரு! கரெக்ட்டா அப்போ பாத்து டைரக்டரோட செல் அடிக்குது.

எடுத்தால்..மறுமுனையில் டிரைவர் ‘‘சார்..நாலைஞ்சு கடைல கேட்டுப் பாத்துட்டேன்! அந்த ஜெல்யூஸில் இல்லேங்கறாங்க!’’ன்னார் பதட்டமாக! உடனே டைரக்டர் ‘‘பரவால்ல..டைஜின் இருக்கும். அதை வாங்கிட்டு வாப்பா’’ன்னாரு. ‘‘சரிங்க சார்‘‘னு சந்தோஷமா ஃபோனை வெச்சாரு டிரைவர்.

மறுபடியும் அரைமணி நேரமாச்சு! டிரைவர்கிட்டேர்ந்து தகவலே இல்லை. அடிமனசு எரிய..ஆவேசமாகிட்டாரு டைரக்டர். நல்லவேளையா அதே நொடி டிரைவர்கிட்டேர்ந்து ஃபோன். ‘‘என்னப்பா பண்ணித்தொலையற?’’னு எரிஞ்சு விழுந்தாரு டைரக்டர். பதிலுக்கு டிரைவர் ‘‘சார்..டைஜினும் இல்லேங்கிறாங்க சார்’’னார் கூலா!

டைரக்டருக்கோ ‘‘என்னடாது..கிழக்கு கடற்கரைச் சாலையிலிருக்கற அத்தனைபேரையும் இன்னிக்கு ‘அஜீரண சுனாமி‘ அட்டாக் பண்ணிருச்சா?’’னு செம ஷாக்! அதே அதிர்ச்சியோட ‘‘ஏப்பா..எல்லா கடையிலயுமா ஜெல்யூஸிலும், டைஜினும் இல்லேங்கிறாங்க?’’னு கேட்டிருக்காரு.

‘‘ஆமா சார்..ஏழெட்டு கடை ஏறி இறங்கிட்டேன். எங்கியுமே இல்லேன்னுதான் சொல்றாய்ங்க’’ன்னாரு அந்த அப்பாவி டிரைவர். ‘சட்‘டுன்னு டைரக்டருக்கு ஒரு ‘ஸ்பார்க்‘ அடிச்சது! ‘‘ஆஹா..அவனல்லவா நீ?‘‘ன்னு உஷாரானவர்..‘‘ஏப்பா! ஏழெட்டு கடைன்னு சொல்றியே..எந்த கடைப்பா?‘‘ன்னு கிடுக்கிப்பிடி போட்டாரு.

உடனே அந்த டிரைவர் ‘‘என்ன சார்..என்னைப்போயி இப்படி நம்பாம கேக்கறீங்களே? ஈ.சி.ஆர்.ரோட்டுல இருக்கற அத்தனை ஒயின்ஷாப்பிலயும் கேட்டுட்டேன் சார். அப்பிடி ஒரு சரக்கே இல்லேய்ங்கிறாங்க!’’ன்னார் வெள்ளந்தியா! இதைக்கேட்டதுமே ‘அடப்பாவி‘ன்னு மனசு நொந்து,,குடல் வெந்து கிடந்த டைரக்டர் வாய்விட்டுச் சிரிச்ச சிரிப்புல..சிறுகுடல், பெருங்குடலே செரிச்சுப் போயிருச்சாம்!
இதனால் அறியப்படும் நீதி: ஒரு ‘சிப்‘பந்தியை ஒயின்ஷாப்புக்கு மட்டுமே தொடர்ந்து அனுப்பாமல்..அப்பப்போ மெடிக்கல் ஷாப்புக்கும் அனுப்பறது நம்ம ‘உடல் மற்றும் குடல் நலத்துக்கு‘ நல்லது! ஏவ்வ்வ்வ்!

‘புத்தபிட்சு’ சத்யராஜ்!

Saturday, June 27, 2009




‘பேய் புடிச்சமாதிரி ஆட்டற பரபரப்பு வாழ்க்கையில..வாய்விட்டு சிரிக்கறதுக்கு வாய்ப்பில்லாம போச்சே‘னு நான் நினைக்கற நேரமெல்லாம் ‘கெக்கெக்கே‘னு சிரிக்கவைக்கற சம்பவங்கள் எக்கச்சக்கமா இருக்கு! அதுல அதிமுக்கியமானது ‘சத்யராஜும் மணிவண்ணனும் கைகோத்து நடத்துன காமெடி கூத்து‘!

மணிவண்ணனின் ‘நூறாவது நாள்’ படத்தை மறக்கமுடியுமா? அதுல சத்யராஜ்தானே வில்லன்! அப்போ அவருக்கு தலையில கொஞ்சம் அடர்த்தியா முடி இருந்த காலம். ஆனா மணிவண்ணனோ ‘‘தலைவா..உங்களைப் பாத்தா வில்லன் மாதிரியே தெரியலை. ஒரு சேஞ்சுக்கு மொட்டை அடிச்சுட்டு வாங்க‘ன்னுருக்காரு.

நம்மாளுதான் ‘பிறவி நடிகராச்சே‘! ‘சரி‘ன்னு சொல்லிட்டு ‘பலூன் விடற‘ சந்தோஷத்தோட சலூன் போயிருக்காரு. ‘பளபள‘ன்னு மொட்டைய போட்டு..
‘பளீர்‘னு வந்து மணிவண்ணன் எதிர்ல நின்னுருக்காரு. சத்யராஜை மேலையும் கீழையுமா
பாத்த மணிவண்ணன் ‘‘என்ன தலைவரே! ஒரு டெர்ரர் லுக்கே உங்ககிட்ட இல்லையே! அசப்புல பாத்தா ஒரு புத்தபிட்சு மாதிரியில்ல இருக்கீங்க!‘‘ன்னு ‘சின்னவயசுல பாத்த
‘கோத்தபய‘ மாதிரினு நெனைச்சு‘ நக்கலா சிரிச்சுருக்காரு!

‘சும்மா இருந்தவனை சூடேத்தி மொட்டை போட வெச்சு..
இப்போ அதுல ஆம்லெட் வேற போடறாரே‘னு கடுப்பாயிட்டாரு சத்யராஜ். எக்கச்சக்க
கோவத்தோட பககத்திலிருந்த மேக்கப் ரூமுக்கு போனவரு..அங்கிருந்த ‘செக்கச்செவேர்‘
சாயத்தை எடுத்து தன்னோட மூஞ்சியில தெளிச்சுகிட்டாரு. ஒரு ‘முட்டை ஃப்ரேம்‘
கண்ணாடியை எடுத்து மாட்டிகிட்டாரு.

முகத்துலயும், மூக்குக்கண்ணாடியிலயும் ‘ரத்தம்‘ சொட்டச்சொட்ட மணிவண்ணன் முன்னாடி போயி ‘தடால்‘னு நிக்கறாரு. லேசா ஆடிப்போன மணி ‘‘ஆஹா தலைவரே! பிறவி வில்லன் மாதிரி பிரமாதமா இருக்கு இந்த கெட்டப்பு!’’னு பிரமிக்கறாரு. சத்யராஜ் ‘கொலைகார மொட்டையா‘ கொண்டாடப்பட்ட கதை இப்படித்தான் ஆரம்பமாச்சு.

இதே மணிவண்ணன் டைரக்ஷன்ல ‘முதல் வசந்தம்‘ படத்துல
‘குங்குமப்பொட்டு கவுண்டர்’ கேரக்டர்ல ‘நம்ம வயிறு சிரிச்சு புண்ணாகற அளவுக்கு‘
சத்யராஜ் காமெடியில பிரிச்சு மேஞ்சிருப்பாரு! ஆனா இதுல நிஜ காமெடி என்னன்னா..
அந்தப் படத்தோட முதல் ஷாட் எடுக்கறவரைக்கும் சத்யராஜ் கேரக்டருக்கு இப்படியொரு பேரே கிடையாது!

சென்னை ஒய்.எம்.சி.ஏ. கிரவுண்டுல முதல் ஷாட் எடுக்கறாரு மணிவண்ணன். தான் ஆசையா வளக்கற ஒரு குதிரைக்கு சத்யராஜ் குங்குமப்பொட்டு வெக்கிற மாதிரி சீன்! அப்போ பாத்து சத்யராஜுக்கு ‘பளிச்னு ஒரு ஐடியா வந்துருச்சு.
உடனே மணிவண்ணனைப் பாத்து ‘‘தலைவரே! குதிரைக்கு பொட்டு வெச்ச கையோட எனக்கும் ஒரு பொட்டு வெச்சுக்கறேன். அப்படியே நம்ம கேரக்டருக்கும் ‘குங்குமப்பொட்டு கவுண்டர்’னு ஒரு பேரையும் வெச்சுக்கலாமே!’’னு ‘பொட்டுல‘ அடிச்ச மாதிரி சொல்றாரு!

மயிர்கூச்செரிய ‘அடேங்கப்பா‘னு ஆச்சரியமா சத்யராஜை ஒரு
பார்வை பாத்த மணிவண்ணன் ‘‘ஏந்தலைவரே! அதென்ன குங்குமப்பொட்டு கவுண்டரு? இப்படியொரு பேரா?’’னு கேட்டாரு. ‘‘ஆமா தலைவரே! எங்க ஊர்ல ‘மில்லு கவுண்டரு, கொள்ளு கவுண்டரு, பேரிக்கா கவுண்டரு, அமெரிக்கா கவுண்டரு‘ன்னெல்லாம் ‘காரணப் பேருக’ நெறையா இருக்கு’’ன்னு மத்தாப்பு சிரிப்போட கித்தாப்பா சொல்லியிருக்காரு
சத்யராஜ்.

‘அப்படியா சேதி‘ன்னு ‘டபுள் ஓகே‘ பண்ணிட்டாரு மணி! இதே
ஜோர்ல ‘முதல் வசந்தம்‘ படத்துல அப்பப்போ சத்யராஜ் தன்னோட ‘சொந்த நக்கலையும்‘ சொருகி கைதட்டல் வாங்குனது தனி! ஒரு சீன்ல சத்யராஜ், தான் வளர்க்கற குதிரையை
பாத்து ‘‘என்னம்மா கல்யாணி..சௌக்கியமா?‘‘னு கேப்பாரு! உடனே அவர் பக்கத்திலிருக்கற வேலைக்காரர் ‘‘ஏனுங்க கவுண்டரே! ஆம்பளை குதிரைக்குப்போயி பொம்பளை பேரை வெச்சு கூப்பிடறீங்களே?’’ம்பாரு!

அதுக்கு உடனே சத்யராஜ் பதிலடியா ‘‘அப்பத்தான்டா நீங்கள்லாம் இந்த குதிரைய நல்ல்ல்லா தேச்சு குளிப்பாட்டுவீங்க!’’ன்னு ‘சரக்‘குன்னு தன்னோட ‘சொந்த சரக்கையும்‘ அள்ளிவீச..அந்த லொள்ளுக்கு தியேட்டரே ‘கொல்‘லுன்னு சிரிச்சுச்சுல்ல!

‘ரெட்டைக்குழல் டுப்பாக்கியா‘ சத்யராஜும் மணிவண்ணனும் இப்படி அலப்பறை பண்றப்போ..மூணாவது ‘பீரங்கியா‘ பட்டை கிளப்பற
கவுண்டமணியும் இவங்களோட சேந்தா..கட்டைகூட ‘கட்டையில போறவரைக்கும்‘
சிரிச்சுதானே ஆகணும்!

சில சமயங்கள்ல மணிவண்ணன் கொஞ்சம் வில்லங்கமான பார்ட்டி! ஷூட்டிங்கை ஸ்டார்ட் பண்ணிட்டு திடீர்னு சத்யராஜை பாத்து ‘‘தலைவரே! முகத்துல
ஆவேசம் கொப்பளிக்க ஓடுங்க!’’ம்பாரு சீரியஸா! டைரக்டர் சொல்லிட்டாரேன்னு
சத்யராஜும் வேகாத வெயில்ல வெறிகொண்ட மட்டும் ‘மாங்கு மாங்கு’ன்னு
தெருத்தெருவா ஓடிக்கிட்டே இருப்பாரு!

கேமராவும் துரத்திக்கிட்டு வந்து ஷூட் பண்ணிகிட்டே இருக்கும்! ஆனா மணிவண்ணன் மட்டும் ‘ஜில்‘லுன்னு நிழல்ல நின்னுகிட்டு ‘குப்குப்‘புன்னு
தம்மடிச்சுகிட்டே இருப்பாரு! இதைப்பாத்த சத்யராஜுக்கு ‘எங்கியோ தப்பு‘ன்னு பட்சி
சொல்லுது! அதை ரொம்பநாள் ஆராய்ஞ்ச கவுண்டர்தான் பிச்சி பீறாய்ஞ்சுட்டாரு!

எடுக்கப்போற சீனுக்கான டயலாக் ஏதும் ‘க்ளிக்’ ஆகலேன்னா..
உடனே மணிவண்ணன் சத்யராஜை ‘ஓடுறா ராமா‘ ரேஞ்சுல விரட்டிவிட்டுட்டு..ஓரமா
நின்னு டயலாக்கை யோசிச்சுகிட்டிருப்பாராம்!

அடிக்கடி மணி இப்படி பண்றதைப் பாத்த கவுண்டமணி
சைலன்ட்டா ஒருநாள் சத்யராஜ்கிட்ட ‘‘ஆஹா! பார்ட்டி இப்பதான் தூண்டிலை
போட்டிருக்காப்ல! இனி மீன் புடிச்சு, அறுத்து கொழம்பு வெச்சு படைக்கறதுக்குள்ள ஓடி ஓடி உங்க நாக்கு அந்துபோகும்..எங் கொடலு வெந்துபோகும்!‘‘னு நொந்துபோய் சொல்ல.. அந்த லந்துக்கு யூனிட்டோட சந்துபொந்தெல்லாம் சிரிச்சதாம்!

பின்விளைவு..முன்விளைவு!

Wednesday, June 10, 2009


சிங்கம் கெட்டா குகை..பத்திரிகையை விட்டா சினிமா!’..இது நம்ம புதுமொழி! ‘பத்திரிகையாளர் டைரக்டராகிறார்ங்கற அடையாளத்தோடகலைச்சேவை ஆற்றலாம்னு காரசேவை தின்னுகிட்டே முடிவு பண்ணேன். விடிவு வந்துச்சு.

ஜல்லிக்கட்டு பத்தி இதுவரை வராத நுட்பமான விஷயங்களை களமாக வெச்சு கதை,திரைக்கதை.வசனம் எழுதிஉப்புமூட்டைங்கற படத்தை நான் டைரக்ட் பண்றதா பத்திரிகைகள்ல நியூஸ்லாம் கொடுத்தோம். நண்பர்கள் தோள்

கொடுக்க..தயாரிப்பாளர் ஹரி கைகொடுக்க..பிரமாண்டமான ஜல்லிக்கட்டுக்கான வேலைகளும் ரெடி. காளைகளும் ரெடி!

இசையமைப்பாளர் உதயா நீதிதேவனின் இசையில் அஞ்சு

பாடல்களுக்கான ட்யூன் கம்போஸிங்கும் முடிஞ்சது. ஆர்ட்டிஸ்ட்டுகளை புக் பண்ற நேரத்துலதான்ஹார்ட் அட்டாக் மாதிரி வந்ததுஜல்லிக்கட்டுக்கு தடைங்கற செய்தி.

பாய்ச்சலுக்கு தயாரா இருந்த காளைகளுக்கு காய்ச்சல் வந்த மாதிரி நாங்க துவண்டு

போனோம்.

தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோட ஜல்லிக்கட்டை

நடத்திக்கலாம்னு மறுதீர்ப்பு வந்து மாடுகளோட சேர்த்து எங்க வயித்துலயும்பாலை

வார்த்துச்சு. ‘ம்மான்னு மறுபடியும் வேலைகளை தொடங்கினோம். ‘சிக்கன் சாப்ஸ்லேர்ந்து தப்பிச்ச கோழியை தந்தூரியில வெச்சு தாளிச்சமாதிரி கோர்ட் தீர்ப்பு சாதகமா

வந்தாலும்..பிராணிகள் நல வாரியம் அருவாளை ஓங்கிகிட்டு நின்னுச்சு.

காளைக்கு வால் இருக்கலாம். ஆனா அது வாலாட்டிச்சுன்னா நீங்கதான் காரணம் சொல்லணும்’’ங்கற ரேஞ்சுக்கு பிராணிகள் நல வாரியம் போட்ட 108 கண்டிஷன்களைப் பாத்தா..‘ஜல்லிக்கட்டை விடுங்க..மாடுகளோட மௌனப்பேரணியைக்கூட படம் பிடிக்கமுடியாது. விட்டா..இனவிருத்தி செய்ற காளையைக்கூடபாலியல்

வன்முறைன்னு புடிச்சு கொட்டடிக்கு கொண்டுபோயிருவாங்க போல!

முதல் போடற தயாரிப்பாளர் ஒருபுறமும், முதல் படம் இயக்கற நான் மறுபுறமும்பலியாடுகள் மாதிரி ஃபீல் பண்ற காட்சியைப்பாத்தா..அந்த

பொலிகாளைகளே கூட கண்ணீர் விட்டுரும். ஆகவே மக்கா..இப்போ வேறொரு பக்கா ஸ்க்ரிப்ட் ரெடியாகிடுச்சு. ஆகவேண்டிய வேலைகளுக்கு ஆயத்தமாகறோம்.

முன்கதைச்சுருக்கம் கொஞ்சம் நீளமாயிருச்சு. சொல்லவந்த

காமெடி வேற! இந்த ஜல்லிக்கட்டுக்காக எக்கச்சக்க பிராணிகளையும், கெக்கெக்கே கேரக்டர்களையும் சந்திச்சேன். அப்போ அறிமுகமானவரு அம்மாசி!

சிங்கம்புணரி ஜல்லிக்கட்டுன்னா சிங்கம்கூட மிரளும்!

அப்பேர்ப்பட்ட ஜல்லிக்கட்டு அன்னிக்கு நடந்துகிட்டிருக்கு. ‘பெத்த பேரு எடுத்த மாடுபுடி வீரர்கள்லாம் கெத்தா களத்துல நிக்க..‘செத்த எலி கணக்கா அம்மாசியும் அங்க நிக்கறாரு. சுத்திநின்னு வேடிக்கை பாக்கற சுத்துப்பட்டு ஜனங்களுக்கு ஒரே ஆச்சரியம்!

மண்ணெண்ணெய் குடோன்ல வௌக்கெண்ணெய்க்கு என்ன வேலை?’னு தன்ன எகத்தாளமா பாக்கற ஜனங்களை அம்மாசி அசால்ட்டா

பாத்தாலும்..அடிமனசு நடுங்கறது அவருக்கு மட்டும்தான் தெரியும். அம்மாசி லவ்ஸ் விட்ட முறைப்பொண்ணு அடாவடி ஆளு. ‘கட்டுனா ஒரு வீரனைத்தான் கடிக்குவேன். முடிஞ்சா இந்தாட்டி நடக்கற ஜல்லிக்கட்டுல ஒரு காளையை தொட்டுட்டு வா..கட்டிக்கறேன்னு

கறாரா சொல்லிருச்சு.

பாசமா தாலிக்கயிற கட்டலாம்னு பாத்தா..இப்புடி பாசக்கயிற வீசிட்டாளேனு பதறுன அம்மாசிக்குள்ளயும் ஒரு சூரப்புலி துள்ளிகிட்டு

எந்திரிக்க..விளைவு? இதோ ஜல்லிக்கட்டு! தடுப்புக்கயித்துக்கு பக்கத்துல காதலி ஆவலா

பாக்க..வாடிவாசல்கிட்ட நின்னுகிட்டு வீரன்மாதிரி பாவ்லா காட்டறாரு அம்மாசி.

ஆனாலும் பாஞ்சு வர்ற காளையோட வாலைக்கூட

தொடமுடியல. ‘சரி..கொஞ்சம் தள்ளிப்போயி சமாளிச்சிரலாம்னு அம்மாசி நகர..அந்தநேரம் பாத்து காளை ஒண்ணு பாஞ்சுவர..‘ஐயையோனு அம்மாசி காதலி அரண்டு பாக்க..‘ஏதோ ஒரு வெறியில தாவி பலங்கொண்ட மட்டும் காளையோட திமிலை இறுக்கிப்

பிடிச்சுகிட்டாரு அம்மாசி!

கொஞ்சதூரம் பாய்ச்சல் நடக்குது. அது ரொம்ப ரோஷக்கார மாடுபோல! உடம்பை ஒரு உலுக்கு உலுக்க..ஒட்டடை மதிரி கீழேவிழுந்தாரு அம்மாசி. ஒரு

யு டர்ன் அடிச்சுயூ ராஸ்கல்னு முறைச்ச மாடு தலையைக் குனிய (வெக்கத்துல இல்ல!)..

கொலைநடுங்கின அம்மாசி குப்புறத்திரும்ப..அந்தோ! சிந்தாம சிதறாம அவரோடபின்புறத்துல காளையோட கொம்புசதக்னு பாய்ஞ்சது!

அம்மானு அலறுனா அம்மாடு மறுபடியும் குத்துமோனு

பயந்து..அடித்தொண்டையிலேயே அழுதாரு அம்மாசி. அப்போஆசனவாயில வழிஞ்ச ரத்தத்தை வெச்சு யோசன பண்ணி சூப்பரா ஒரு வழியை கண்டுபிடிச்சாரு. உடனே..

போட்டிருந்த பனியனை கழட்டி தேவையான சைஸுக்கு கிழிச்சுசேதாரமாகி ரத்தம் சிந்தற ஆதாரத்துல வெச்சு அடைச்சுகிட்டாரு.

அதுவரைக்கும் வழிஞ்ச ரத்தத்தை வழிச்சு அடிவயித்துல தடவிகிட்டாரு. தட்டுத்தடுமாறி காதலிகிட்ட வந்துஎப்பூடிங்கற மாதிரி லுக் விடறாரு. ஊத்துன வேர்வைல வழிஞ்ச ரத்தம் இடுப்புக்கு பரவி அம்மாசிக்கே தெரியாம..அவரோடதொப்புளுக்கு கீழேழேழேயும் வழியுது. இதைமட்டுமே பாத்த காதலிமாமோய்..ஒடனே ஆஸ்பத்திரிக்கு போயிரு கூவ..அதீத குஷியாலும், அதிக கசிவாலும் அம்மாசி அங்கனயே மயங்கிவிழுந்துட்டாரு.

அப்புறம்? அசலூரு ஆஸ்பத்திரிக்கு வந்துபின்விளைவு தெரியாம சிகிச்சை எடுத்தும்கூட..அந்த காதலி அம்மாசி கையில சிக்கலை. ஏஏஏன்? அங்கதான் இந்த விதிரிவர்ஸ்ல விளையாடிச்சு! ‘ஆசனப்பகுதி ரத்தத்தை எடுத்து அடிவயித்துல பூசிகிட்டு

காதலியை பாத்தார்ல! அப்போ சுத்திநின்ன சொந்தபந்தம் அவரோடஅலங்கோலத்தை

பாத்துட்டு ‘‘ஐயையோ..மாடு முட்டுனதுல அம்மாசியோடடங்குவாரு

அந்துபோச்சுங்கோ!’’னு 18பட்டிக்கும் வாயாலேயேக்ரூப் மெசேஜ் அனுப்பிருச்சு!

வம்ச விருத்தியை நினைச்சு வருத்தப்பட்ட அந்த காதலி..

அம்மாசிக்கு ஆயின்மென்ட் குடுத்துட்டு அம்சமா வேறொரு மாப்பிள்ளையை கல்யாணம் கட்டிக்கிச்சு! ‘‘‘பின்னால வந்த ரத்தத்தாலமுன்னால புண்ணானபொய்க்கதையை

வெளிய சொன்னா வெக்கக்கேடு!’’னு சொல்லி.. தன்னோட அஞ்சுவயசு மகனுக்கு பஞ்சுமுட்டாய் வாங்கிக்குடுத்துகிட்டே சிரிச்சாரு அம்மாசி!

 
சுடச்சுட - by Templates para novo blogger