அப்பாவின் சட்டை

Friday, August 28, 2009






ஏழாப்பு படிக்கையில்
என் முட்டிக்காலுக்கும்
கீழே தொங்கும்
அப்பாவின் சட்டை


போட்டுப் பார்த்து
பொய்மீசை முறுக்க
அப்பாவின் ஜாடையென்பர்
அம்மாவும் பாட்டியும்


தங்கச்சி பாவம்
தரையில் பாவும்
அப்பா சட்டையை
வேட்டியாக மடித்துக்கட்டி
தப்படி வைப்பதற்குள்
தடுக்கி விழுவாள்
கெக்கலிக்கும் வீடு


முனியாண்டி விலாஸ் பார்சல்
ரோஸ்ட் தோசை மாதிரி
ரெண்டு கையையும்
சுருட்டியிருப்பார் அப்பா


கசங்கிய ரூவாய் சில்லறையென
சமயங்களில் அதனுள்
புதையல் சிக்கும்


சில பொழுதுகளில்
நைந்து போன
சிகரெட் மட்டும்


எம்.ஜி.ஆர். உடுத்தின
சந்தன நிறத்தில்தான்
அப்பாவின் சட்டைகளும்


ஆறேழு வைத்திருப்பார்
அத்தனையும் அவர் வாசம்
காலரிலும் கம்முக்கட்டிலும்
பாண்ட்ஸ் பவுடர் ஜாஸ்தி


அடித்துத் துவைத்தால்
அம்மாவையே அடிப்பார்
குழந்தையை கொஞ்சுவதாக
கும்ம வேணும் நுரையால்


இஸ்திரி போட்டெடுத்தால்
அலுமினியத் தகடாக
மினுக்கணும் அவர் சட்டை


இப்போதெல்லாம்
அப்பா அணிபவை
வெள்ளை வெளிர்நீலமென
விலையதிக ரகங்களில்
நான் தந்த சட்டைகளே


ஜோப்பு நிறைய பணமிருந்தும்
விருப்ப நிற சட்டைகளை
எடுப்பதில்லையே ஏன் அப்பா?


பதில் கிடைத்தது
அப்பா சட்டைகளை
பால்யத்தில் போல
அணிந்து பார்த்ததில்...


ஒவ்வொரு சட்டையிலும்
மூச்சை நிறைக்குது
அப்பாவின் வாசத்தைவிட
புத்திரபாசத்தின் மணம்

புஷ்பா தங்கதுரையின் ராக்கெட்!

Friday, August 21, 2009

கிட்டத்துல போய்ப் பழகினா பல பேர் காட்டற நிஜமுகத்தைப் பாத்து..விட்டத்துல தூக்கு போட்டுத் தொங்கலாம் போலத்தோணும். ஆனா புஷ்பா தங்கதுரை அப்படியல்ல. சக்கரை தடவி பொய்யா பேசற வம்பான ஆளுங்களை விட..அக்கறை கலந்து உண்மை பேசற அன்பான மனிதர்.
இவரை ஒருமுறை சந்திக்கற யாருமே..மறுமுறை பாக்கப்போறப்போ சொந்த வீடு வாங்கியிருப்பாங்க!அந்த அளவுக்கு ‘சிங்கிள் டீக்கு’ சிங்கி அடிக்கறவங்களைக் கூட ஒரு சிங்கிள் பெட்ரூம் வாங்கறரேஞ்சுக்கு...கையில பொறுப்பையும், வயித்துல நெருப்பையும் கலந்துகட்டி தந்து அனுப்புவாரு!
புஷ்பா தங்கதுரை. கிளுகிளுப்பான பெயர். எழுத்துல ‘டபுள் ஆக்‌ஷன்’ மன்னன். கிறங்கடிக்கிற மாதிரி ’பெண்’மீகம் எழுதறப்போ..புஷ்பா தங்கதுரை. ரங்கநாதனைப் பத்தி ஆன்மீகம் படைச்சா..ஸ்ரீவேணுகோபாலன்.துப்பறியும் நாவல்களும், தப்பறியும் உண்மைக் கதைகளும் எழுதி வாசகர் வட்டத்தை மயங்க வைத்தவர்.
இந்த பிம்பத்தோடதான் ஒருமுறை புஷ்பா தங்கதுரையை சந்திக்கப் போனோம். வேற யாரு? நானும், அந்தணனும்தான். ‘காணாமப் போன தம்பி புள்ளைகளை மறுபடியும் கண்டுபிடிச்ச பெரியப்பா மாதிரி’பாசமா வரவேற்று உபசரிச்சாரு. வெள்ளை வேட்டி சட்டை. அதே அலைபாயும் சுருள்முடி..ஆர்வமா எட்டிப்பாக்கற கண்கள்னு சிம்பிளா இருந்தாரு.
அவரோட எழுத்துக்களைப் பத்தி விலாவரியா சிலாகிச்சுப் பேசின எங்களுக்கு விழா எடுக்காத குறைதான்.விக்ஸ் முட்டாய் முதல் செக்ஸ் கல்வி வரை அத்தனையும் அலசித் துவைச்சாரு பாருங்க..அசந்துபோயிட்டோம். ‘’எங்கூட வாங்க’’ன்னு உள்ரூமுக்கு கூட்டிட்டுப் போனாரு. கம்ப்யூட்டரை ஆன் பண்ணிஒரு ப்ராஜெக்ட்டை காட்டினாரு. வானவியல் பத்தி ஃவேறு.. ஆணிவேறா எக்கச்சக்க டீடெய்ல்ஸோட பிரிச்சு மேஞ்சிருந்தாரு.
‘’என்ன சார் இது?’’னு வியந்துபோய் கேட்டோம். மெல்லிசா சிரிச்ச புஷ்பா தங்கதுரை ‘’வானவியல் பத்திஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்கேங்க! விட்டா என் வீட்டு மாடியிலிருந்தே செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்விடுவேங்க. அந்த அளவுக்கு ராக்கெட் தயாரிப்புல அப்டேட்டா இருக்கேன் சார்’’னு அதிரடியா சொல்ல..அரண்டு போயிட்டோம். இந்த வயசிலும் மனுஷனுக்கு அப்படியொரு அறிவுத் தேடல்!
அப்புறம் அப்படியே ஜாலியா அரட்டை அடிச்சோம். திடீர்னு புஷ்பா த.துரை எச்சரிக்கையான குரல்ல‘’சார்..இந்த வயசில நிறையா சம்பாதிங்க! கையில பணம் இல்லேன்னா..ரொம்ப கட்டம் (கஷ்டம்ங்கிறதை இப்படித்தான் உச்சரிக்கிறார்) சார்! கட்டுன பொண்டாட்டி கூட மதிக்க மாட்டா சார்! அதேமாதிரி எப்பாடுபட்டாவது ஒரு சொந்த வீடு வாங்கிருங்க சார். சொத்துபத்து இல்லேன்னாலும் சின்னதா ஒரு சொந்த வீடு வாங்கிருங்க சார். யாரு கஞ்சி தண்ணி ஊத்தலேன்னாலும்..பச்சத்தண்ணியக் குடிச்சுட்டுகாலாட்டிகிட்டு படுத்து தூங்கலாம் சார். இல்லேன்னா ரொம்ப கட்டம் சார்!”னு அவர் சொல்லச்சொல்ல..எங்களுக்கும் இனம்புரியாத பயமும், திடீர் துடிப்பும் வந்துருச்சு.
அப்புறம் சில வருஷ இடைவேளைக்குப் பிறகு புஷ்பா த.துரையை சந்திக்கப் போனோம்.‘மனுஷர் என்ன காயகல்பம் சாப்பிடறாரோ..அப்படியே ஜம்முன்னு இருந்தார்’. எடுத்த எடுப்புலயே‘’சார்..சொந்த வீடு வாங்கிட்டீங்களா? இல்லேன்னா ரொம்ப கட்டம் சார்’’னு சொன்னதுமே...நாங்க கையோட கொண்டு போயிருந்த ‘ஹவுஸிங் லோன் சாங்ஷன் லெட்டரை’ காட்டினோம்.
நம்பமாட்டீங்க...அவர் முகத்துல அப்படியொரு சந்தோஷம்! ‘’நல்ல பசங்க சார் நீங்க. ரொம்ப நல்லா வருவீங்க’’னு ஆசீர்வதிச்சார். எங்களுக்குள்ளயும் எதையோ சாதிச்சுட்ட குஷி. ஆனா எந்த ஒரு நல்ல விஷயம் நடக்கறதுக்கு முன்னாலயும் ஒரு பெரும் போராட்டம் நடக்கும்ல..அப்படித்தான் நடந்தது லோன் மேட்டர்லயும்.
லோன் சாங்ஷன் பண்ண அந்த தனியார் வங்கி திடீர்னு லோன் தர மறுத்திடுச்சு. காரணம் கேட்டா...சின்னப்புள்ளத்தனமா ஏதேதோ சொன்னாங்க. பல இடங்கள்ல அலைஞ்சு தேடி, நுழைஞ்சு பாத்தும்ம்ஹூம்..பாச்சா பலிக்கலை. ‘விடு’ன்னு விட்டுட்டோம். ஆனாலும் இன்னிக்கு வரைக்கும் எங்களுக்குஇருக்கற ஒரு திருப்தி...அந்த லோன் சாங்ஷன் லெட்டரை வெச்சு புஷ்பா தங்கதுரையையாவதுசந்தோஷப்படுத்தினதுதான்!



சிரிப்பு ரிப்பீட்டேய்!

Saturday, August 1, 2009

வெரைட்டியாக பல வெற்றிப்படங்கள் தந்து மிரட்டிய டைரக்டர் அவர்! ஊரும் வேண்டாம்..பேரும் வேண்டாம். மேட்டர் மட்டும் போதுங்ணா!

‘கல்லிலே கலைவண்ணம் கண்ட‘ மாமல்லபுரத்துக்குப் பக்கத்தில் ‘ஃபுல்லிலே கதைவண்ணம் கண்ட‘ நம்ம டைரக்டர் தங்கியிருக்கற ஒரு ரிசார்ட். சிலுசிலுன்னு காத்தும்..குளுகுளுன்னு ஏ.சி.யும் கலந்து கலக்கற கடற்கரையோர ரூம். அடுத்த படத்துக்கான பட்டறையை போட்டு..கதையை பட்டை தீட்டிக்கிட்டிருக்காரு டைரக்டர்.

பொழுது சாஞ்சாலே பல ‘இறக்குமதி சரக்குகளை‘ உள்ளே ‘இறக்கிகிட்டு‘ பொழுதுபோக்கறது நம்ம டைரக்டரோட வழக்கம். அன்னிக்கும் வழக்கம்போல ஜாலியா பல ‘லார்ஜ்‘களை காலி பண்ணினதோட விளைவு..அடுத்தநாள் காலையில டைரக்டரோட வயிறு செம ‘லார்ஜாகி‘ அப்செட் ஆயிருச்சு.

‘சரக்குக்கு முறுக்கு‘ முதல்..‘வீட்டுக்கு பலசரக்கு‘வரை வாங்கிவந்து சேர்க்கிற டிரைவர்தான்..அன்னிக்கும் கூடவே இருந்தாரு. விடிஞ்சதிலேர்ந்தே அஜீரணக் கோளாறால ‘வயித்துக்குள்ள வன்முறை‘ நடக்கிறதை தாங்கமுடியாத டைரக்டர்..தன்னோட டிரைவரைக் கூப்பிட்டு ‘‘கடைக்குப் போயி ‘ஜெல்யூஸில்‘ வாங்கிட்டு வாப்பா‘‘ன்னாரு!

‘மிட்டாய் வாங்கப் போற சிறுவன் மாதிரி‘ சிட்டாய் பறந்தார் டிரைவர். ரெண்டு மணி நேரமாகியும் போன டிரைவர் வரவே இல்லை. டைரக்டரோ.. வயித்தெரிச்சல், நெஞ்செரிச்சலோட சேர்ந்து ஏகப்பட்ட எரிச்சலோட காத்துக்கிடக்காரு! கரெக்ட்டா அப்போ பாத்து டைரக்டரோட செல் அடிக்குது.

எடுத்தால்..மறுமுனையில் டிரைவர் ‘‘சார்..நாலைஞ்சு கடைல கேட்டுப் பாத்துட்டேன்! அந்த ஜெல்யூஸில் இல்லேங்கறாங்க!’’ன்னார் பதட்டமாக! உடனே டைரக்டர் ‘‘பரவால்ல..டைஜின் இருக்கும். அதை வாங்கிட்டு வாப்பா’’ன்னாரு. ‘‘சரிங்க சார்‘‘னு சந்தோஷமா ஃபோனை வெச்சாரு டிரைவர்.

மறுபடியும் அரைமணி நேரமாச்சு! டிரைவர்கிட்டேர்ந்து தகவலே இல்லை. அடிமனசு எரிய..ஆவேசமாகிட்டாரு டைரக்டர். நல்லவேளையா அதே நொடி டிரைவர்கிட்டேர்ந்து ஃபோன். ‘‘என்னப்பா பண்ணித்தொலையற?’’னு எரிஞ்சு விழுந்தாரு டைரக்டர். பதிலுக்கு டிரைவர் ‘‘சார்..டைஜினும் இல்லேங்கிறாங்க சார்’’னார் கூலா!

டைரக்டருக்கோ ‘‘என்னடாது..கிழக்கு கடற்கரைச் சாலையிலிருக்கற அத்தனைபேரையும் இன்னிக்கு ‘அஜீரண சுனாமி‘ அட்டாக் பண்ணிருச்சா?’’னு செம ஷாக்! அதே அதிர்ச்சியோட ‘‘ஏப்பா..எல்லா கடையிலயுமா ஜெல்யூஸிலும், டைஜினும் இல்லேங்கிறாங்க?’’னு கேட்டிருக்காரு.

‘‘ஆமா சார்..ஏழெட்டு கடை ஏறி இறங்கிட்டேன். எங்கியுமே இல்லேன்னுதான் சொல்றாய்ங்க’’ன்னாரு அந்த அப்பாவி டிரைவர். ‘சட்‘டுன்னு டைரக்டருக்கு ஒரு ‘ஸ்பார்க்‘ அடிச்சது! ‘‘ஆஹா..அவனல்லவா நீ?‘‘ன்னு உஷாரானவர்..‘‘ஏப்பா! ஏழெட்டு கடைன்னு சொல்றியே..எந்த கடைப்பா?‘‘ன்னு கிடுக்கிப்பிடி போட்டாரு.

உடனே அந்த டிரைவர் ‘‘என்ன சார்..என்னைப்போயி இப்படி நம்பாம கேக்கறீங்களே? ஈ.சி.ஆர்.ரோட்டுல இருக்கற அத்தனை ஒயின்ஷாப்பிலயும் கேட்டுட்டேன் சார். அப்பிடி ஒரு சரக்கே இல்லேய்ங்கிறாங்க!’’ன்னார் வெள்ளந்தியா! இதைக்கேட்டதுமே ‘அடப்பாவி‘ன்னு மனசு நொந்து,,குடல் வெந்து கிடந்த டைரக்டர் வாய்விட்டுச் சிரிச்ச சிரிப்புல..சிறுகுடல், பெருங்குடலே செரிச்சுப் போயிருச்சாம்!
இதனால் அறியப்படும் நீதி: ஒரு ‘சிப்‘பந்தியை ஒயின்ஷாப்புக்கு மட்டுமே தொடர்ந்து அனுப்பாமல்..அப்பப்போ மெடிக்கல் ஷாப்புக்கும் அனுப்பறது நம்ம ‘உடல் மற்றும் குடல் நலத்துக்கு‘ நல்லது! ஏவ்வ்வ்வ்!

‘காதல் வந்தவர்களுக்கு’ மட்டும்!

Monday, July 20, 2009

தீபாவை அப்படியொரு ‘சீச்சீ‘ சிச்சுவேஷனில் சந்திப்பேன் என்று
நான் எதிர்பார்க்கவே இல்லை. தேவதை போல இருந்தவள்...வேண்டாம்.
இப்படியாகிவிட்டாளே!

நீலாங்கரையோர ரிசார்ட். ஏ.சி. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாமே என்று கடற்கரையோர புல்வெளியில் ஜாலிநடை போட்டேன்.
அப்போது..அலையோர விளையாட்டில் மூன்று ‘ரிச்சான‘ ராஸ்கல்ஸ். நடுவே கிட்டத்தட்ட பாதி ‘ஏவாளாக‘ தீபா. ‘‘ஆ..என்
தீபாவா இவள்?’’.. அதிர்ந்து பார்த்தேன். அவளை விட்டு தள்ளிவந்து என் பக்கத்தில் நின்ற ஒருவன் ‘‘மச்சான்.. அந்த மாடலிங் ஃபிகர் நம்மகூடதான் இருக்கா. பேரு..சோனா. ஈவ்னிங் வந்துருடா’’ என்றான் குஷியான குரலில்.

அவன் சொன்னது..சோனா! இவளோ..தீபா! என் மூளையில்
குண்டூசிகள் குத்தின. செம ஷாக்கோடு அவளை ஷார்ப்பாகப் பார்த்தேன். அவளும் என்னை நேராகப் பார்த்தாள். ‘‘தீபா!‘‘ மனசுக்குள் கத்தினேன் நான். அவளோ காஷுவலாக என்னைப் பார்த்துவிட்டு எனக்கு முதுகு காட்டினாள்.

அடி ராட்சஸி! என்னாச்சுடி உனக்கு? வருஷங்கள் ஓடினால் கேரியர் மாறலாம். கேரக்டர் மாறுமா? 2001..ஒரு பிரபல விளம்பர நிறுவனத்தில்..கிரியேட்டிவ் டீமில் நானும், அவளும். காஃபி, கவிதை, யுத்தம், முத்தம், காதல், கலாட்டா என இருவருக்கும் ஒரே டேஸ்ட்..ஒரே அலைவரிசை. விளைவு..டாப் கியரில் எகிறிய நட்பு..எதிர்பார்த்தபடியே ‘காதலாகி கசிந்துருகியது‘!

தீபாவை நான் டீப்பாக லவ் பண்ணியதற்கு இன்னொரு
காரணம்..அவளது கருணை மனசு! அதுவும் அனாதைக் குழந்தைகள் மீது அபார
தாய்ப்பாசம் காட்டியவள். பெரும்பணக்காரக் குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால்
சம்பாதிப்பதில் பெரும்தொகையை அனாதைப் பிள்ளைகளுக்காக செலவிடுவாள்.

சர்ப்ரைஸாக ஒருநாள் அதிகாலை என் அறைக்கு வந்தாள். ‘என்னடி‘ என்று கேட்பதற்குள்..கட்டிப்பிடித்து முகம் முழுக்க முத்தமிட்டாள். உள்ளுக்குள் ஏறிய உஷ்ணம் உச்சியிலும் ஏற..அப்படியே நானும் அவளை இறுக்கி முத்தமிட்டேன். முன்னழகை பார்த்து திணறியது மூச்சு. முழு அழகு பார்த்து குளறியது பேச்சு. அன்று எனக்கு பர்த் டே. அதுக்கான கிஃப்ட் இது!

ஒருநாள்..வீட்டிற்கு கூட்டிட்டுப் போனாள். எங்கள் காதல் பற்றி ஏற்கனவே வீட்டில் சொல்லியிருப்பாள் போல! எடுத்த எடுப்பிலேயே ஆன்ட்டி (தீப்ஸ் மம்மி) ‘‘நிச்சயமா இது ஒத்துப்போகாது. அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சா எங்களை கொன்னுடுவார். எல்லாத்தையும் மறந்துடுங்க!’’ என்று கையெடுத்துக் கும்பிட்டார். அதன்பிறகு அவளை வீட்டுச்சிறை வைத்துவிட்டார்கள் அவளது பெற்றோர்.

அதே வீட்டிற்குள் என் உயிரையே பணயம் வைத்து நுழைந்து தீபாவை சந்தித்தேன் ஒருநாள்... ‘‘கண்காணாத ஊருக்குப் போயிரலாம். உன்னை
கண்கலங்காமல் நான் காப்பாத்தறேன்..வா தீபா!’’ என்றேன். ‘‘நீயும் நானும் திருட்டுத்தனம் பண்ணலையே! எதுக்காக ஓடிப்போகணும்? என் வீட்டுல பர்மிஷன் வாங்கறேன். கொஞ்சம் பொறுடா!’’ என்றாள் அதீத நம்பிக்கையோடு!

அவ்வளவுதான்..அப்புறம் தீபாவை பெங்களூருக்கு அனுப்பி
விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பு அறுந்தது. அது ஒரு காதல் காலம்!
ஆனால்..இதோ..இப்போதோ..இப்படிப் பார்க்கிறேன் இவளை! என்னைக்
கண்டுகொண்டதாகத் துளிகூட காட்டிக்கொள்ளவில்லை. பெயரையே மாற்றிக்கொண்டு ‘புதுத்தொழிலில்’ இறங்கிவிட்டவளுக்கு ‘பழைய காதல்‘ குப்பை மேட்டர்தான்!

சம்பவ இடத்திற்கு ‘மீண்டு’ வந்தேன். அன்று நான் கற்பனையில்கூட ஸ்பரிசிக்கத் தயங்கிய அங்கங்களை..இன்று எவனெவனோ தொட்டுத் தடவுகிறான். ‘‘உவ்வே!’’. அவள் காதுபட சத்தமாக காறி உமிழ்ந்தேன். முகம் சுளித்துப் பார்த்த தீபா ச்சே..ச்சே..சோனா சட்டெனத் திரும்பி என்னை முறைத்துப் பார்த்தபடி வந்தாள். கண்ஜாடையிலேயே என்னை தனியாக வரச்சொன்னாள். ஏதோ ‘மந்திரிச்சு‘ விட்டமாதிரி நானும் ஓரமாக ஒதுங்கி நின்றேன்.

‘‘நான் சோனா இல்லை. தீபாதான்! டாடியோட பிசினஸ்ல பயங்கர லாஸ். வீடு, கார்னு எல்லாத்தையும் வித்து தந்தும் கடன்தொல்லை தீரலை. கௌரவமா வாழ்ந்த குடும்பம். கடைசியில சூசைட் பண்ணிக்கற நிலைமைக்கு வந்துருச்சு. வேற வழி? வீட்டுக்கு ஒரே பொண்ணு. நாந்தானே அவங்களை காப்பாத்தியாகணும்?

கை நிறைய சம்பாதிச்சாலும் கடனுக்கும், வாடகைக்குமே சரியாப் போகுது. ஃபிரெண்ட் ஒருத்தி ஐடியா குடுத்தா. தடாலடியா நானும் டிசைட் பண்ணேன். சோனான்னு பேரை மாத்தி மாடலிங்கில் இறங்கினேன். பேருக்குத்தான் மாடலிங். ஆனா பெரிய பிஸினஸ் மேக்னட்ஸ் சிலபேருகிட்ட ரெகுலரா ‘கான்டாக்ட்ஸ்‘ இருக்கு. அவங்களோட ‘விளையாட்டுப் பொம்மை‘ நான்!’’.. மூச்சுவிடாமல் தீபா சொன்னதைக்கேட்டு மூச்சு வாங்கியது எனக்கு!

கையிலிருந்த மினரல் வாட்டரை நீட்டி ‘‘குடிக்கிறியாப்பா?’’ என்று அதே கனிவோடு கேட்டாள். வெட்டி வீறாப்போடு ‘‘வேணாம்‘‘ என மறுத்தேன்.
வருத்தமான புன்னகையோடு ஒரு மடக்கு குடித்துவிட்டு தொடர்ந்தாள்..‘‘இப்போ
மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கறேன். நிம்மதியா இருக்கு ஃபேமிலி. என்னை உயிரா மதிச்சு..பாசமா வளர்த்த என் டாடி, மம்மி நல்லா இருக்கணும். அதுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்!’’ என்றாள் அழுகையும், ஆவேசமும் கலந்து தெறிக்க!

அருகில் வந்தவள் என் தலைமுடியை கொத்தாகப் பிடிக்க..‘ அதிர்ந்துபோய் நின்றேன் நான்! ‘‘‘என் உடம்பை யார்யாரோ தொட்டாலும்..என் மனசை முதல்முதலா தொட்டவன் நீதான்! இப்பவும் என் மனசுக்குள்ள உயிரா ஓடறது..நானும் நீயும் காதலர்களா இருந்த அந்த அற்புதமான நாட்கள்தான்! எனக்காக உன் உயிரையே தர்ற அளவுக்கு துணிஞ்ச உன்கிட்ட ஒரே ஒரு ஹெல்ப் கேக்கறேன். செய்வியா..ப்ளீஸ்?’’ என்றாள்.

இன்னமும் என் அடிமனசில் புதைந்து கிடந்த அவள் மீதான
காதல்..அவள் இப்படிக் கேக்க வெடித்து சிதறிவிடும் போலிருந்தது! ‘‘செய்றேம்மா!’’ என்றேன் தீனமான குரலில். ‘‘ப்ளீஸ்..உன் பழைய தீபாவா உனக்கு ஒரு பாச முத்தம் தரவா..ப்ளீஸ்!’’ என்றவள்..அருகே வாசனையாக வந்து என் உதட்டில் ஒரு முத்தத்தை அழுத்தமாக தந்துவிட்டுப் போனாள்!

வாய்விட்டு கதறி அழுதேன்! காரணம்..வாய் வைத்துக் கொடுத்த ‘‘சோனா‘‘வின் முத்தத்தில்..உப்புக் கரித்தது என் தீபாவின் கண்ணீர்!
(பின்குறிப்பு: இது எனது நண்பனின் அனுபவம்!)

சென்னை டைரிக்குறிப்பு!

Thursday, July 16, 2009

அதிகாலையில் ‘சூடான டீ. காஃபிக்களுக்காக’ ‘ஆவின் பால்’கள் ஜில்லென்று வாசலில் பூத்திருக்கின்றன. ‘கௌசல்யா சுப்ரஜா‘ அரைத்தூக்கத்தில் காதினில் சுக ராகம் பாய்ச்சுகிறது.

கடற்கரையில் ‘சக்கரை‘ வி.ஐ.பி.கள், ’தொப்பை ‘தாங்கிகள் காரில் வந்து காஸ்ட்லியாக மூச்சு வாங்குகிறார்கள்.

புதுசான சூரிய ஒளியில் ‘தி ஹிந்து‘க்களும், ‘எக்ஸ்ப்ரஸினரும்‘ சுடச்சுட மொடமொடக்கிறார்கள். ரோட்டோர டீக்கடையில் ‘யுவன்ஷங்கர் ராஜா‘வுடன் அலறும் ‘ஹாரிஸ்‘. அத்தனை வாகனங்களையும் மேற்பார்வையிடும் அண்ணா மேம்பாலக் குதிரைவீரன். மெத்தப்படித்த மேதாவிகளை இரவு பகலாக பிளாட்ஃபார்மில் நிற்கவைத்து ‘சமத்துவம்‘ போதிக்கும் ‘அமெரிக்கத் தூதரகம்‘.

சாய்ந்து ஊர்ந்திடும் அரசு பஸ்களில் மூச்சுத்திணறும் நடுத்தர
வர்க்கம். அதனுள்ளே நெருக்கத்தில் ‘திருட்டு ஸ்பரிசம்‘ தேடும் ‘தகாத விரல்கள்‘.
அக்கறையாக கணவன் வயிற்றில் கையால் கொக்கி போட்டு ‘சக்கரை மொழி‘ பேசி அலுவலகம் பயணிக்கும் ‘அகல முதுகு‘ மனைவி‘மார்கள்‘.

டூ வீலரில் வித்தை காட்டுவது ‘பையனா பொண்ணா‘ என்று ‘பால் நிர்ணயம்‘ செய்வதற்குள் ‘பின் கூந்தல்‘ பறக்க ‘வ்ர்ரூம்மிடும்‘ இளசுகள். குவியல் குவியலாக அவியல் மக்களை தனக்குள் அடைகாத்திருக்கும் ‘ஸ்பென்சர் பிளாசா‘. அண்ணா சாலையில் அண்ணாந்து பார்க்கவைக்கும் அந்நாளைய அதே ‘பதினாலு மாடி எல்.ஐ.சி.‘ மாநகரச் சுவர்களில் அரை, முக்கால் நிர்வாணிகளாய் காட்சியளிக்கும் சினிமா ‘ஆதாம் ஏவாள்கள்‘.

இளமைப் பட்டாளத்தை தனது பெயருக்கு ‘பட்டா‘ போட்டுக்
கொண்டு குளுமையாக படம் காட்டுகிற ‘சத்யம் காம்ப்ளெக்ஸ்‘. அசுத்தமான மானிடர்களால் கறைபட்டு துக்கமாய் ஓடும் ‘கறுப்பு கூவம்‘. இஷ்டத்திற்கு சாணி கழித்து மனிதர்களுடன் சமமாக ஊடாடும் திருவல்லிக்கேணி மாடுகள். அழகான..அழுக்கான மேன்ஷன்களில் அடைந்து கிடக்கும் ஜீன்ஸ் பிரம்மச்சாரிகள். ‘குட்டி ஆஃப்கானிஸ்தானோ‘ என ஆச்சரியப்படுத்தும் கூட்டமான பர்தா பெண்கள்.

‘தென்மாவட்ட மனிதச் சங்கிலிகளை’ தினந்தோறும் நடத்துகிற
‘எழும்பூர் ரயில் நிலையம். ‘தேசிய ஒருமைப்பாட்டின் ஓடுதளமான‘ சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். எத்தனையோ ‘எத்தன்களை‘ தனக்குள் பிடித்து வைத்திருந்து இன்று இடிபடப்போகும் மத்திய சிறை. ‘ஜொள் விளையாட்டு‘ மட்டுமல்ல..இளைஞர்களின் திறமையான ‘உள்விளையாட்டையும் பாரு’ என்று மகா அரங்கம் வைத்து காத்திருக்கும் ‘நேரு‘.

பல மைல்களுக்கு அப்பாலிருந்து வரும் காதலர்கள் தனது
‘முப்பாலில்‘ இருந்து மட்டுமே ‘கொட்டம்‘ அடிக்க ‘கோட்டம்‘ தந்த ‘வள்ளுவர்’. லட்சக்கணக்கானோரின் இச்சை தீர்க்க காமிரா முன் கச்சை காட்டும் கோலிவுட்
ஜிகினாப்பெண்கள். ‘இன்னோவா, ஆக்சென்ட்‘களை வழுக்க விட்டுவிட்டு ‘இன்னாபா‘ என்கிற டி.வி.எஸ். ஒல்லி வண்டிகளை மடக்கிப்பிடித்து அபராதம் விதிக்கும் டிராபிக் போலீஸ்.

‘த்தா..கீசிடுவேன்‘னு சக தமிழனையே திணறவைக்கும்
தெனாவட்டான ‘சென்னை செந்தமிழ்‘. மூன்றுமணி சுளீருக்கு பஸ் ஸ்டாப்களில் ‘ஜிலீர்‘ இளைப்பாறுதல் தரும் காலேஜ் குமரிகள். இருபது ரூபாய் தூரத்துக்கு நாப்பது ரூவா பறிக்கும் ‘சம்பல்‘ ஆட்டோக்கள். ரஜினியின் தும்மலைக்கூட எட்டுப் பக்க கவர்ஸ்டோரியாக்கி ‘எக்ஸ்க்ளூசிவ்‘ எனத் தொங்கும் வாரப்பத்திரிகைகள். சேனல் மழைக்காக டி.டி.எச். குடை பிடிக்கும் அபார்ட்மென்ட்கள்.

‘கறுப்புப்பூனைகளை‘ முன்னே ஓடவிட்டு ‘கறுப்புகளை‘
பொறுப்பாகக் காப்பாற்றப் ‘பாடுபடும்‘ அரசியல் தலைவர்கள். கொடிபிடிக்க கை தூக்கி..கோஷம் போட வாய் வளர்த்த அப்பாவி ‘தொண்டர்கள்‘. இந்த ‘கல்லாத‘ பேரையெல்லாம் பார்த்து நொந்து ‘கல்லாகிப்போன‘ ‘சிலைத் தலைவர்கள்’.

அடுத்தடுத்து புதுப்புதுசாக நுரைதள்ளும் மெரீனா அலைகள். ‘அசிங்க சங்கதி‘ நடக்கும் இடத்தை வேடிக்கை பார்ப்பதற்கான தண்டனையாக தலைகளில் எச்சம் சுமந்த சிலைகள். இருட்டிய அறையில் செய்யவேண்டியதை ‘சுண்டல் சிறுவர்களின்‘ வெறிப்புகளுக்கிடையே அரையிருட்டில் ‘கொக்கோகிக்கும்‘ சகல வயது ஆடவர்..மகளிர்.
பின்னிரவு வரை போதை மயக்கம் ஏற்றும் நட்சத்திர ஹோட்டல்கள். ஐநூறு ரூபாயில் வாய் துடைக்கும் கரன்சி சுல்தான்கள். ஆயிரக்கணக்கான ரூபாய் பில்லுக்கு அலட்சியமாய் நீட்டும் ‘கிரெடிட் கார்டர்கள்‘.

வங்கக்கடல் அலையின் தாலாட்டில் நனையாமல் ‘அணையா
விளக்கோடு‘ சதுக்கத்தில் தூங்கும் தங்கத் தமிழ்மகன் அறிஞர் அண்ணா. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்று இன்றும் தமிழ்மக்கள் மதித்துத் துதித்து..நினைவிடத்தில் ‘எங்கள் தங்கமாய்‘ மங்காமல் ஜொலிக்கிற ‘புரட்சித்தலைவர்‘ எம்.ஜி.ஆர். கடலுக்கே வெளிச்சம் வீசி..தனக்குக் கீழே இருட்டாக இருக்கிற ‘கலங்கரை விளக்கம்‘.

இரவுகளில்..குடிசை, பங்களா, ப்ளாட்ஃபார்ம், கார் என ‘இட
பேதம்‘ பாராது ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த ஒரு காரியம்‘ முடித்து தூங்கிப்போகும் மானுடம்! குட்நைட் சென்னை!

‘மதுரை ஒரிஜினல் கூட்டாஞ்சோறு!’

Sunday, July 5, 2009



‘கால்மணி நேரம் சந்திச்சா போதும்..எந்த துறையிலும் கால் பதிச்சு ஜெயிச்சுரலாம்‘ங்கற நம்பிக்கையை கையில் தந்து, கைகொடுத்து அனுப்பறவர்
மதிப்பிற்குரிய மாலன் சார்!

‘சிறந்த எழுத்தாளர்..புகழ்பெற்ற பத்திரிகையாளர்..ஆழமான அரசியல் விமர்சகர்..அபாரமான ரசனையாளர்‘னு மீடியாவின் அத்தனை ‘திசைகளிலும்‘ வெளிச்சம் பாய்ச்சியவர்!

சமீபத்தில் மாலன் சாரை சந்தித்தேன். முகத்தில் அதே இளமை..பேச்சில் அதே இனிமை. மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்த மாலன் சார் அவர்களுக்கு ‘மண்ணின் மைந்தனான‘ எனது இந்த ‘கூட்டாஞ்சோறு‘ சமர்ப்பணம்!

'படைத்தல்..காத்தல்..அழித்தல்‘னு ஏதாவதொரு வகையில் பணி செய்து ராப்பகலாக உறங்காமல் உலாவும் ‘கடவுள்களின் ஜெராக்ஸர்களான‘ மனிதர்கள். ‘வையை எனும் பொய்யாக் குலக்கொடி‘ என மெச்சிய ‘சிலப்பதிகாரத்தை‘
பொய்யாக்கிவிட்டு.. வெள்ளம் வந்தால் மட்டுமே கங்கு கரை வரை ‘நுங்கும் நுரையுமாகப் பொங்கியோடும் ‘வைகை‘ (நதி?) கம்மாய்.

வெள்ளையன் தூக்கிலிட்ட பின்னும் அந்த கம்பீரம் குறையாமல் இன்னும் சிலையாய் வாளேந்தி நிற்கும் ‘கட்டபொம்மன்‘. நகரத்தின் இண்டு இடுக்கு சந்து பொந்தெல்லாம் ‘வ்ர்ர்ரூம்ம்‘ என வந்துபோகும் ‘அரசுப் பேருந்துகள்‘. ‘அங்கிட்டும் இங்கிட்டுமாக‘ ஜனங்கள் பரபரக்கும் ‘பெரியார் பஸ் ஸ்டாண்ட்‘. தள்ளி நின்று ஒல்லியான குரலில் ‘‘ரூம் வேணுமாணே? பார்ட்டி ரெடி‘‘னு அடித்தொண்டையில் அழைப்பு விடும் ‘அவனா நீ‘க்கள். கூட்டமாக முண்டியடிக்கும் ‘பலரக‘ யூனிஃபார்ம் ‘துணி(மாணவ) மணிகள்.‘

அள்ளிச்செருகிய கூந்தல் கலையாமல்..வாயில் வெத்தலையையும்,கையில் கூடையையும் இடுக்கியபடி மிடுக்காக நடக்கும் ‘காதுவளத்த‘ பாட்டிகள். கிட்டத்திலேயே ‘சதக் சதக்‘ கொலையை ரத்தமும் மையும் உலர்வதற்கு முன்னரே முந்தித்தரும் ‘தினத்தந்தி‘ ஆபீஸ். அன்று பூத்து இன்று குலுங்கி என்றுமே வாசம் ‘கும்ம்‘மிடும் அதே வெள்ளைவெளேர் ‘மதுரை மல்லி’.

பேச்சுக்குப் பேச்சு ராகம் கலந்த ‘அண்ணே‘ போடும் ‘ஆறிலிருந்து அறுபது வயதான‘ தம்பிகள். நண்டு சிண்டுகள் முதல் பெண்டுலம் கழண்ட தொண்டு கிழம் வரை சகலருக்கும் ஒரு காலத்தில் ‘முண்டு அணிந்த குண்டு பெண்டுகளால்‘ வெள்ளித்திரையில் ‘கிளுகிளு‘ விருந்தளித்த ‘தங்க ரீகல்‘.

எதிரே..‘இதைத்தான் அமிர்தம்னாய்ங்களோ‘னு வியக்கவைத்து.. சுடச்சுட கமகமக்க தேக்கிலையில் வாங்கி ‘க்ளுக் க்ளுக்‘னு விழுங்க..தொண்டையிலேயே கரைந்து உயிர்வரை இனிக்கும் ‘திருநெல்வேலி அல்வா‘. மதுரையை பத்திரமாய் ஆண்ட ராணி மங்கம்மாவின் ‘மிச்ச நினைவுத்துணுக்காய்‘ மங்கம்மா சத்திரம்.

‘க்ளிப், கர்ச்சீப், ஜீன்ஸ், சட்டை, பேனா, டி.வி, கேசட், ஸ்டிக்கர், கடுக்காய், டி.வி.டி, பெல்ட், கத்தி, காபித்தூள்..என்ன வேணும்ணே‘னு சுத்தி நின்னு கத்திக்கூப்பிடும் டவுன்ஹால் ரோட்டில்..உதிரியாகச் சிதறி நிற்கும் ‘மினி மனித
டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள்‘. ‘சொக்க‘ வைக்கும் ‘மீனாட்சி‘ கோபுரங்கள். அதன்
மாடங்களில் வாடகையின்றி குடியிருக்கும் ஜாலியில் சடசடக்கும் புறாக்கள். சரிசனமாக தரிசனம் செய்து திரும்பும் பக்தர்கள். எப்போதுமே நெரிசலான நாலுமாசி வீதிகள்.

‘பசும்பொன்‘ நிறத்தில் பிரகாசிக்கும் கோரிப்பாளையம் ‘தேவர்‘ சிலை. நாற்புறமும் ‘டூ..த்ரீ..ஃபோர்..சிக்ஸ் வீலர்களில்‘ காதலி, மனைவி, அம்மா, பிள்ளை, பங்காளிகளுடன் சிக்னலில் சிக்கி நிக்க..நடுவே சுகமாக ‘கம்புக்கூடு‘ சொறியும் தொத்தலான போலீஸ்காரர். ‘வைகையில்‘ குளித்து வந்த ஒட்டுமொத்த மதுரைக்கே கட்டிமுடிக்கற அளவுக்கு ‘அஞ்சாநெஞ்சனின்‘ விசுவாசிகள் கட்டிவைத்திருக்கிற ‘விசுவரூப‘ விளம்பர
போர்டுகள்.

அசிட்டிக் வாசம்‘ கமழும் அரசு ராசாசி மருத்துவமனை. அழுக்காக
நோயாளிகள்..விசனத்தோடு ‘உறமுறைகள்‘..சிரிப்போடு கடக்கும் டாக்டர்கள். அந்த ‘முண்டாசு கட்டிய முறுக்கு மீசைக்காரன்‘ ஒரு காலத்தில் தன் ‘குஞ்சுகளுக்கு‘ ‘அக்னி‘ ஊட்டிய அதிசயம் நிகழ்ந்த ‘சேதுபதி மேல்நிலைப்பள்ளி‘.

பிரிட்டிஷ் காலத்துக் கம்பீரத்துடன் கலெக்டர் ஆபீஸ். சராசரி
வாழ்நாளான ஐம்பதாண்டுகளில்&முப்பது வருஷமாக வீட்டுப்பட்டா கோரி அலையும் சுத்துப்பட்டு 18 பட்டி ஆம்பளை பொம்பளைகள். ‘முதியோர் பென்ஷனுக்காக‘ பியூனையே ‘கலைக்டராக‘ நினைத்து கெஞ்சும் ரவிக்கை போடாத மூதாட்டிகள். கலெக்டர் தவிர..மற்ற மாந்தர்களையெல்லாம் ‘அற்ப புழுவே‘ன்னு பார்த்துச் செல்லும் கிளார்க்குகள்.

‘கமுக்கமாக‘ பல சம்பவங்களை புதைத்து வைத்திருக்கும் ‘தமுக்கம் மைதானம்‘. புத்தக மூட்டை சுமக்கும் வயசுல சாக்கு மூட்டை சுமந்து பேப்பர்
பொறுக்கும் ‘போஷாக்கு போதாத‘ ‘இந்தியாவின் எதிர்காலம்‘. அசையாத சைவர்களையும் அசைத்துவிடும் ‘அசைவ முனியாண்டி, தலப்பாகட்டி நாயுடு‘கள்.

ஒவ்வொரு கார்த்திகைத் திருநாளன்றும் ‘இந்து..முஸ்லிம்‘ ஒற்றுமைக்கு ஏதாவது ஊறு நேருமோ என ‘மலை உச்சியில் தீபத்தை‘ கட்டிக்கொண்டு பதற்றத்தோடு காத்திருக்கும் ‘திருப்பரங்குன்றம்‘. ஹாலிவுட் நடிகன்லேர்ந்து இன்னிக்கு காலையில் அறிமுகமான ‘புதுமுக ஜுஜுபி‘வரை அகில உலகத்துக்கே ரசிகர் மன்றம் வைத்து ‘கலை‘ வளர்க்கும் ‘ஜிகர்தண்டா‘ ரசிகர்கள். எக்கச்சக்க மேதைகளை ‘உருவாக்கி..உள்ளடக்கி’ வைத்துள்ள ‘காமராசர் பல்கலைக்கழகம்‘.

‘ஐயோ பசி‘ன்னு வந்தோர்க்கு எந்த நேரமும் ‘ஐயா..ருசியா புசி‘ன்னு படையல் போடுற ‘டண்டக்கு டண்டக்கு‘ கொத்துபரோட்டாக்கள். ‘அலாவுதீன்‘ பறக்கும் இட்லிகள். மணிரத்னம் பட ஷூட்டிங்கிற்கு தன் புராதன ‘மகாலை‘ வாடகைக்கு விடும் ‘நாயக்கர்‘. ‘கஞ்சா புகையோடு‘ சந்துகளில் அஞ்சாமல் நெளிந்து ஓடும் சைக்கிள் ரிக்ஷாக்கள். ‘பாட்ஷா‘ ஸ்பீடில் பாய்கிற ஆட்டோக்கள். ஊருக்குப் போகிற ‘அவசரத்தில்‘ ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு ‘கட்டணக் கழிப்பறை‘ முன்னே நிற்கிற ‘அவஸ்தை பயணிகள்‘.

‘தல‘யை வம்புக்கிழுத்த ‘தளபதி‘ ரசிகருக்கு கத்திக்குத்து‘னு
அசால்ட்டா அடுத்தநாள் காலைப் பேப்பருக்கு செய்தி கொடுத்துவிட்டு..மத்திய சிறையில் ‘கைதியாகவும்‘, ஆஸ்பத்திரியில் ‘அவசர வார்டிலும்‘ தூங்கும் ‘அவசர ஆவேச வாலிபர்கள்‘. ‘உலக நாயகனையே‘ ‘புன்னகை மன்னனாக்கிய‘ பேராசிரியர் கு. ஞானசம்பந்தன். ‘‘ம்..கொல்றாய்ங்கய்யா‘‘னு குலுங்கக் குலுங்கச் சிரிக்கவைத்து அலுங்காமல் ‘தமிழ்‘ போதித்து.. நிறத்திலும், பேச்சிலும் ‘கருப்பட்டியாக‘ இனிக்கும் ‘சாலமன் பாப்பையா‘. வர்றேண்ணே!

‘ரஜினி அங்கிளும்‘..சிறுமிகளும்!

Friday, July 3, 2009





வெள்ளிநுரை விளையாடற அலையோரமா நின்னா.. நாம ‘மீனவ நண்பன்‘! கொஞ்சம் தள்ளி உழைப்பாளர் சிலையோரமா நின்னா..நாம ‘உழைப்பாளி’!
ரிப்போர்ட்டர்ங்கறதால..‘போர்ட்டர்‘ முதல் ஓட்டுநர் வரை எல்லாருமே நமக்கு நல்ல
தோஸ்த்துகதான்!

‘அம்மா மெஸ்‘ எதிரே..ஆட்டோக்காக நிக்கறேன். ‘முந்தி வர்ற இந்த மூணு சக்கர தேரெல்லாம்‘ நாலுசக்கர வாகன ரேஞ்சுக்கு ரேட் கேக்க..அஞ்சி நின்னேன். அப்போ பாத்து வந்த ஒரு ‘ஆட்டோபாந்தவன்‘..‘‘தலைவா! எப்டி க்றீங்க? ஏறி குந்துங்க. வீட்டாண்ட இட்டர்றேன்!‘‘னு பாசமா சொல்ல..‘அட..நம்மாளு‘னு ‘ஆட்டோமேட்டிக்கா‘ ஏறி உக்காந்தேன்.

அந்த ஆட்டோ டிரைவர்..மணிகண்டன். பார்வைக்கு கொஞ்சம் முரடா தெரிஞ்சாலும்..‘தார் பூசின தங்கக்கட்டி‘! சூப்பர் ஸ்டார் ரஜினியே இவரை கூப்பிட்டு பாராட்டியிருக்காரு! ‘நிஜ பாட்ஷா‘வை ‘சூப்பர் பாட்ஷா‘ மெச்சினதுக்கு காரணம்?

‘ஆறறிவு எந்திரன்கள்‘ பரபரப்பா ஓடிகிட்டிருக்கற சென்னை
மாநகரம்! ரத்தக்கண்ணீர் வடிக்க வைக்கிற இந்த நகரத்துல..ஆனந்தக்கண்ணீர் வழியவைக்கிற சம்பவம் அபூர்வமா நிகழும். அப்படி ஒரு சம்பவம்..சில வருஷங்களுக்குமுன்னால சூப்பர் ஸ்டார் வீட்டுக்கு முன்னால நடந்துருக்கு!

தி.நகர் பஸ் ஸ்டாண்ட். மனிதாபிமானத்தை ‘பான்பராக்கு‘ போல மென்னு துப்பற மனுஷங்களை பராக்கு பாத்தபடியே நின்னுகிட்டிருக்காங்க பதிமூணு வயசு சிறுமிகள் ரெண்டுபேர். ‘எப்படியாவது ரஜினி அங்கிளை நேர்ல பாத்துடணும்’ங்கற ஆசையில அன்னை, தந்தைக்குத் தெரியாம சேலத்துலேர்ந்து சென்னைக்கு பஸ் ஏறி
வந்துட்டாங்க.

அசட்டுத்துணிச்சல்ல அசலூருக்கு வந்தாச்சு. ஆனா ‘ரஜினி வீட்டுக்கு எப்படி போறது?’ வழிதெரியாம முழி பிதுங்கி நிக்கறாங்க. வழக்கம்போல வழியில வந்த ஒரு ஆட்டோ டிரைவர் இந்த சிறுமிகள்கிட்ட நைஸா பேச்சு குடுக்கறாரு. வெள்ளை மனசுப் பிள்ளைகள் ரெண்டு பேரும் விஷயத்தை சொல்லிட்டாங்க!

‘‘அடடே! நானும் ரசிகன்தாம்மா! உங்க ரெண்டுபேரையும் ரஜினி அங்கிள் வீட்டுக்கே கூட்டிட்டுப்போறேன் வாம்மா!’’னு ஆட்டோக்காரர் சொல்ல.. ‘‘சரிங்க அங்கிள்’’னு அப்பாவிப்பிள்ளைகளும் ஆட்டோல ஏறிக்கொள்ள..சீறிக்கிளம்பிச்சு ஆட்டோ! சுத்திமுத்தி நின்ன லோக்கல் ஆசாமிகளும் ‘கலி முத்திப்போச்சுமா‘னு கிலியை கிளப்பிட்டாங்க!

பாசமுள்ள வாசகர்களே! இனிமேல் நீங்க படிக்கப்
போகும் சம்பவம்..ப்ச்! என்னத்த சொல்ல? வேண்டாம்..தொடர்ந்து படிங்க!

‘விருட்‘னு வந்து நிக்கற ஆட்டோலேர்ந்து ரெண்டு சின்னப்பிள்ளைக செம குஷியோட ஓடிவர்றாங்க! இதைப்பாத்து குழம்பிப் போனாங்க போயஸ் கார்டன்ல இருக்கற ரஜினி வீட்டு செக்யூரிட்டிகள்! தொடர்ந்து ஆட்டோ டிரைவரும் ஆசையா வந்து ‘பாவம்..சின்னப்புள்ளைக ஆசைப்பட்டுச்சு! அதான் கூட்டி வந்தேன்‘‘னு ‘கைப்புள்ளத்தனமா‘ சொல்றாரு.

நொந்துபோன செக்யூரிட்டிகள் ஆட்டோ டிரைவர்கிட்ட ‘‘ஏப்பா.. அந்த புள்ளைகளுக்கு வெவரம் பத்தாது. ஆனா உனக்கோ வெவரமே கெடையாது‘‘னு திட்டிமுடிச்சாங்க. வந்த ‘ரெட்டைவால்களோ’ ‘‘ரஜினி அங்கிளை பாக்காம போக
மாட்டோம்’’னு அழுது அடம்புடிக்க..‘‘சார் படம் புடிக்க போயிருக்காருமா‘‘னு பதில்
சொல்லியும் ‘புள்ளப்பூச்சியா‘ குடைஞ்சிருக்குக புள்ளைங்க!

ஒருவழியா கெஞ்சிக் கூத்தாடி ‘ரஜினி ஃபோட்டோ‘ல்லாம் தந்து பிள்ளைகளை சமாதானப்படுத்தி ‘ஆத்தாடி‘ன்னு பெருமூச்சு விடறதுக்குள்ள..அடுத்த பிரச்னை வந்துருச்சு! ‘இந்த வாண்டுகளை ஊருக்கு திருப்பி அனுப்பறது எப்படி?‘னு பதறுறாங்க செக்யூரிட்டிக! அந்த ஆட்டோக்காரரோ ‘‘பத்திரமா நான் அனுப்பி வெக்கிறேங்க!‘‘னு அக்கறையா சொல்றாரு.

‘‘தம்பி..உன்னை நம்பி எப்படிப்பா அனுப்பறது?’’னு செக்யூரிட்டிகள் மறுக்க..‘‘தலைவர் மேல சத்தியமா நான் பத்திரமா அனுப்பிச்சிடறேங்க!‘‘னு ஆட்டோக்காரர் கெஞ்ச..‘போயஸ் கார்டன்ல பழைய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படம்
மாதிரி‘ ஒரு ‘பாசப்போராட்டமே‘ நடக்குது. இதுக்கு நடுவே அந்த பிள்ளைககிட்ட ஒரு செக்யூரிட்டி நைஸா அட்ரஸை விசாரிக்கறாரு.

‘கிளிப்பிள்ளையா‘ பிள்ளைகள் வீட்டு அட்ரஸை ஒப்பிக்க..‘அடப்
பாவிப்பய புள்ளைகளா‘‘னு ஒரு செக்யூரிட்டி சந்தோஷத்துல அணில்பிள்ளையா குதிக்கறாரு. ஏன்னா..அதுல ஒரு புள்ளை அவரோட பொண்டாட்டி வகையறாவுல சொந்தக்காரரோட மகள்! அப்புறமென்ன..அந்த சொந்தகாரருக்கு தகவல் சொல்றாங்க. அங்கேதான்
க்ளைமாக்ஸே!

‘‘ஆமாமுங்க! முட்டாயை தின்னுகிட்டுத் திரிஞ்ச ரெண்டு
முட்டாப்பய புள்ளைகளும் ரஜினியை பாக்கணும்னு மெட்ராஸ்க்கு ஓடிவந்துருக்குன்னு
ஆட்டோக்காரத் தம்பி மணிகண்டன்ங்கறவர் ஃபோன் பண்ணி சொல்லிட்டாருங்க! அதான் அவங்க தாய்மாமன் கௌம்பி வந்துகிட்டிருக்காருங்க!’’னு ஒரு பிள்ளையோட அப்பா
சொல்ல..நம்ம ஆட்டோ மணியோட அக்கறையை பாத்து கண்கலங்கிட்டாங்க செக்யூரிட்டிகள்!

இந்த தகவல் நம்ம காதுக்கு வர..ஆட்டோ மணியை பிடிச்சு
‘அன்புள்ள் ரஜினிகாந்த்!‘னு ஒரு ஃபோட்டோ ஸ்டோரி ‘குங்குமம்‘ இதழில் எழுதினேன். அந்த கட்டுரைல ஃபைனல் டச்சா ‘இந்த சென்னைக்கு ‘அன்புள்ள ரஜினிகாந்த்‘ என்று ஆசையோடு ஓடிவந்த அப்பாவி சிறுமிகளை பத்திரமாகப் பாதுகாத்த ‘பாட்ஷா‘ மணிகண்டனுக்கும், அவர்களை பொறுப்பாக வீட்டுக்கு அனுப்பிவைத்த ‘ஊர்க்காவலன்‘ செக்யூரிட்டிகளுக்கும் கோடி கங்க்ராட்ஸ்!’’னு எழுதியிருந்தேன்.

கட்டுரை சூப்பர் ஸ்டாரின் பார்வைக்கு போனது. ஆட்டோ மணியின் வீடு தேடி ‘மனிதன்‘ அழைப்பு வந்தது. ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து
கால்தொட்ட மணியை ரஜினி தோள்தொட்டு பிடிச்சு ‘‘நீதான் நிஜ ரஜினி!‘‘னு கண்கசிய
பாராட்ட..கதறி அழுத மணிக்கு ‘அப்போது வழிஞ்ச கண்ணீர் அவ்வளவு இனிப்பா இருந்துச்சாம்!’

‘மர்மயூகி‘ கமல்!

Monday, June 29, 2009




கலைஞானி கமல் பத்தி கடந்த பதிவுல ‘ஏதோ ஊதுபத்தி‘ அளவுலதான் சொல்லிட்டமோனு மனசுக்குள்ள ஒரு யோசனை வாசனையா புகையுது!

கார்ட்டூன்ல பாக்கற ‘காட்டு யானையை‘ ‘நேர்ல காட்டு‘ன்னா..என்ன செய்வான் இந்த ஏழை இளைஞன்? அதான்..கமல்ஹாசனை காட்டிட்டு போறேன்!

இப்போதைக்கு கமல் ‘நரை, திரை, மூப்பு‘ கடந்த புத்தர்! இன்னும் கொஞ்சம் பழுத்தா இவரே ஒரு சித்தர்! ‘கிண்ணத்தில்‘ தளும்பறதை பாத்ததுமே சிலபேரு தத்துவமா புலம்பறதை கேட்டிருப்போம். ஆனா நாம கேட்ட கேள்விக்கு தன் எண்ணத்தில் பட்டதை பட்டென சொல்லி அசத்தற அசாத்திய திறமைசாலி கமல்!

கேள்விக்குறியை ஆச்சரியக்குறியா மாத்தற கமலிடம் ஒரு கேள்வி கேட்டாங்க..‘காலையில் எழுந்ததும் யார் முகத்தில் விழிப்பீர்கள்?’. ‘பாசாங்கா ஒரு பதிலைச் சொல்லி ‘பேஷா இருக்கே‘னு கமல் பேர் வாங்கியிருக்கலாம்! ஆனா ‘அதிமேதாவிகளையே வெள்ளாவியில போட்டு வெளுக்கறமாதிரி‘ அப்பட்டமா இப்படி பதில் சொன்னார்
கலைஞானி..‘‘காட்டில் இருந்தால் நரி முகத்தில். கட்டிலில் கிடந்தால் ஸ்திரி முகத்தில்!’’

சிரிச்சுகிட்டு பேசறப்போ கூட கமல் நம்மளை பிரிச்சு
மேஞ்சுருவாரு! ‘விருமாண்டி‘ ப்ரஸ்மீட். நடுநாயகமா ‘மருதநாயகம்‘ உக்காந்திருக்காரு.
இடம், வலமா இருந்த நிருபர்கள் படம் பத்தி கேக்கறோம். அப்போ நான் என் பங்குக்கு ‘‘விருமாண்டிக்காக ரெண்டு காளைகளை பயங்கரமா வளக்கறீங்களாமே?’’ன்னேன். உடனே வாய்விட்டு சிரிச்ச கமல் ‘‘ஐயையோ..பயங்கரமால்லாம் வளர்க்கலீங்க! புண்ணாக்கு,
தீவனம்னு போட்டு சாதாரணமாதான் வளர்க்கறோம்!’’னு சொல்ல..தறிகெட்டு சிரிச்சோம்.

‘சிஃபி.காம்‘க்காக எனக்கு கமல் ‘சிறப்புப்பேட்டி‘ தந்தப்போ.. உறைப்பா ஒரு கேள்வி கேட்டேன். ‘‘மகாநதி‘ பட வில்லன் மாதிரி நிஜத்துல யாராவது தன்னோட கையையே வெட்டிக்குவாங்களா?’ன்னேன்.

‘‘இதைவிட கொடூரமால்லாம் சம்பவம் நடந்துருக்குங்க. எங்க ஊர்ல ஒருத்தனோட கையை எதிராளிங்க பாதி வெட்டிட்டாங்க. உடனே அவன் என்ன பண்ணான் தெரியுமா? அதே கையை முழுசா வெட்டி..அதை இன்னொரு கையில எடுத்துகிட்டு ரத்தக்களறியா சண்டை போட்டிருக்கான்!’’னு கமல் சொல்ல..கைகட்டி கேட்டுகிட்டேன்.

எனக்கு ரொம்பநாளா ஒரு டவுட்டு! ‘எப்பவுமே பிஸியா இருக்கற கமல் தனிமையா இருக்கும் சமயங்கள்ல என்ன செய்வார்?‘. நாக்குல நின்ன கேள்வியை போறபோக்குல கமல்கிட்டயே கேட்டுட்டேன்.

‘‘என்னை தட்டி எழுப்பற கேள்வி இது. என்ன..புரியலைங்களா? நண்பர்கள்கூட இல்லாத ஒரு தனிமை கிடைச்சுதுன்னா..உடனே நான் கண்மூடி
தியானத்துல ஆழ்ந்துருவேன்! ‘ஆஹா..கமல் தியானம்‘னு கவர்ஸ்டோரி கிடைச்சுருச்சுனு அவசரப்பட்டு முடிவு பண்ணிராதீங்க!’’னு சஸ்பென்ஸா சிரிச்சாரு கமல்.

சில ‘டிக்டிக்டிக்‘குக்கு பிறகு அவரே ‘டக்‘குன்னு சொன்னாரு..
‘‘தியானம்னு சொன்னது வேறெதுவுமில்ல..நல்லா நிம்மதியா தூங்குவேன்! சான்ஸ்
கிடைச்சா கொடைக்கானல் போயிருவேன். அப்படியே மலைக்குள்ள ஒரு இலை மாதிரி கிடந்து சுகமா தூங்கிருவேன்!’’னாரு ‘தமிழ் சினிமாவை விழிக்கவெச்ச இந்த மகா
கலைஞன்‘!

அதுசரி ‘நம்மவர்களே‘! இந்த பதிவுல போட்டுருக்கற கமல்
ஃபோட்டோ எப்போ..எதுக்காக எடுக்கப்பட்டதுன்னு கரெக்ட்டா சொல்ற ‘மர்மயூகி‘களுக்கு ஸ்ரீதர் சார் ‘சிரிப்பு பரிசு’ வழங்கறார் என்பதை ‘ஏழ்மையுடன்‘ தெரிவிச்சுக்கறேங்க!

‘புத்தபிட்சு’ சத்யராஜ்!

Saturday, June 27, 2009




‘பேய் புடிச்சமாதிரி ஆட்டற பரபரப்பு வாழ்க்கையில..வாய்விட்டு சிரிக்கறதுக்கு வாய்ப்பில்லாம போச்சே‘னு நான் நினைக்கற நேரமெல்லாம் ‘கெக்கெக்கே‘னு சிரிக்கவைக்கற சம்பவங்கள் எக்கச்சக்கமா இருக்கு! அதுல அதிமுக்கியமானது ‘சத்யராஜும் மணிவண்ணனும் கைகோத்து நடத்துன காமெடி கூத்து‘!

மணிவண்ணனின் ‘நூறாவது நாள்’ படத்தை மறக்கமுடியுமா? அதுல சத்யராஜ்தானே வில்லன்! அப்போ அவருக்கு தலையில கொஞ்சம் அடர்த்தியா முடி இருந்த காலம். ஆனா மணிவண்ணனோ ‘‘தலைவா..உங்களைப் பாத்தா வில்லன் மாதிரியே தெரியலை. ஒரு சேஞ்சுக்கு மொட்டை அடிச்சுட்டு வாங்க‘ன்னுருக்காரு.

நம்மாளுதான் ‘பிறவி நடிகராச்சே‘! ‘சரி‘ன்னு சொல்லிட்டு ‘பலூன் விடற‘ சந்தோஷத்தோட சலூன் போயிருக்காரு. ‘பளபள‘ன்னு மொட்டைய போட்டு..
‘பளீர்‘னு வந்து மணிவண்ணன் எதிர்ல நின்னுருக்காரு. சத்யராஜை மேலையும் கீழையுமா
பாத்த மணிவண்ணன் ‘‘என்ன தலைவரே! ஒரு டெர்ரர் லுக்கே உங்ககிட்ட இல்லையே! அசப்புல பாத்தா ஒரு புத்தபிட்சு மாதிரியில்ல இருக்கீங்க!‘‘ன்னு ‘சின்னவயசுல பாத்த
‘கோத்தபய‘ மாதிரினு நெனைச்சு‘ நக்கலா சிரிச்சுருக்காரு!

‘சும்மா இருந்தவனை சூடேத்தி மொட்டை போட வெச்சு..
இப்போ அதுல ஆம்லெட் வேற போடறாரே‘னு கடுப்பாயிட்டாரு சத்யராஜ். எக்கச்சக்க
கோவத்தோட பககத்திலிருந்த மேக்கப் ரூமுக்கு போனவரு..அங்கிருந்த ‘செக்கச்செவேர்‘
சாயத்தை எடுத்து தன்னோட மூஞ்சியில தெளிச்சுகிட்டாரு. ஒரு ‘முட்டை ஃப்ரேம்‘
கண்ணாடியை எடுத்து மாட்டிகிட்டாரு.

முகத்துலயும், மூக்குக்கண்ணாடியிலயும் ‘ரத்தம்‘ சொட்டச்சொட்ட மணிவண்ணன் முன்னாடி போயி ‘தடால்‘னு நிக்கறாரு. லேசா ஆடிப்போன மணி ‘‘ஆஹா தலைவரே! பிறவி வில்லன் மாதிரி பிரமாதமா இருக்கு இந்த கெட்டப்பு!’’னு பிரமிக்கறாரு. சத்யராஜ் ‘கொலைகார மொட்டையா‘ கொண்டாடப்பட்ட கதை இப்படித்தான் ஆரம்பமாச்சு.

இதே மணிவண்ணன் டைரக்ஷன்ல ‘முதல் வசந்தம்‘ படத்துல
‘குங்குமப்பொட்டு கவுண்டர்’ கேரக்டர்ல ‘நம்ம வயிறு சிரிச்சு புண்ணாகற அளவுக்கு‘
சத்யராஜ் காமெடியில பிரிச்சு மேஞ்சிருப்பாரு! ஆனா இதுல நிஜ காமெடி என்னன்னா..
அந்தப் படத்தோட முதல் ஷாட் எடுக்கறவரைக்கும் சத்யராஜ் கேரக்டருக்கு இப்படியொரு பேரே கிடையாது!

சென்னை ஒய்.எம்.சி.ஏ. கிரவுண்டுல முதல் ஷாட் எடுக்கறாரு மணிவண்ணன். தான் ஆசையா வளக்கற ஒரு குதிரைக்கு சத்யராஜ் குங்குமப்பொட்டு வெக்கிற மாதிரி சீன்! அப்போ பாத்து சத்யராஜுக்கு ‘பளிச்னு ஒரு ஐடியா வந்துருச்சு.
உடனே மணிவண்ணனைப் பாத்து ‘‘தலைவரே! குதிரைக்கு பொட்டு வெச்ச கையோட எனக்கும் ஒரு பொட்டு வெச்சுக்கறேன். அப்படியே நம்ம கேரக்டருக்கும் ‘குங்குமப்பொட்டு கவுண்டர்’னு ஒரு பேரையும் வெச்சுக்கலாமே!’’னு ‘பொட்டுல‘ அடிச்ச மாதிரி சொல்றாரு!

மயிர்கூச்செரிய ‘அடேங்கப்பா‘னு ஆச்சரியமா சத்யராஜை ஒரு
பார்வை பாத்த மணிவண்ணன் ‘‘ஏந்தலைவரே! அதென்ன குங்குமப்பொட்டு கவுண்டரு? இப்படியொரு பேரா?’’னு கேட்டாரு. ‘‘ஆமா தலைவரே! எங்க ஊர்ல ‘மில்லு கவுண்டரு, கொள்ளு கவுண்டரு, பேரிக்கா கவுண்டரு, அமெரிக்கா கவுண்டரு‘ன்னெல்லாம் ‘காரணப் பேருக’ நெறையா இருக்கு’’ன்னு மத்தாப்பு சிரிப்போட கித்தாப்பா சொல்லியிருக்காரு
சத்யராஜ்.

‘அப்படியா சேதி‘ன்னு ‘டபுள் ஓகே‘ பண்ணிட்டாரு மணி! இதே
ஜோர்ல ‘முதல் வசந்தம்‘ படத்துல அப்பப்போ சத்யராஜ் தன்னோட ‘சொந்த நக்கலையும்‘ சொருகி கைதட்டல் வாங்குனது தனி! ஒரு சீன்ல சத்யராஜ், தான் வளர்க்கற குதிரையை
பாத்து ‘‘என்னம்மா கல்யாணி..சௌக்கியமா?‘‘னு கேப்பாரு! உடனே அவர் பக்கத்திலிருக்கற வேலைக்காரர் ‘‘ஏனுங்க கவுண்டரே! ஆம்பளை குதிரைக்குப்போயி பொம்பளை பேரை வெச்சு கூப்பிடறீங்களே?’’ம்பாரு!

அதுக்கு உடனே சத்யராஜ் பதிலடியா ‘‘அப்பத்தான்டா நீங்கள்லாம் இந்த குதிரைய நல்ல்ல்லா தேச்சு குளிப்பாட்டுவீங்க!’’ன்னு ‘சரக்‘குன்னு தன்னோட ‘சொந்த சரக்கையும்‘ அள்ளிவீச..அந்த லொள்ளுக்கு தியேட்டரே ‘கொல்‘லுன்னு சிரிச்சுச்சுல்ல!

‘ரெட்டைக்குழல் டுப்பாக்கியா‘ சத்யராஜும் மணிவண்ணனும் இப்படி அலப்பறை பண்றப்போ..மூணாவது ‘பீரங்கியா‘ பட்டை கிளப்பற
கவுண்டமணியும் இவங்களோட சேந்தா..கட்டைகூட ‘கட்டையில போறவரைக்கும்‘
சிரிச்சுதானே ஆகணும்!

சில சமயங்கள்ல மணிவண்ணன் கொஞ்சம் வில்லங்கமான பார்ட்டி! ஷூட்டிங்கை ஸ்டார்ட் பண்ணிட்டு திடீர்னு சத்யராஜை பாத்து ‘‘தலைவரே! முகத்துல
ஆவேசம் கொப்பளிக்க ஓடுங்க!’’ம்பாரு சீரியஸா! டைரக்டர் சொல்லிட்டாரேன்னு
சத்யராஜும் வேகாத வெயில்ல வெறிகொண்ட மட்டும் ‘மாங்கு மாங்கு’ன்னு
தெருத்தெருவா ஓடிக்கிட்டே இருப்பாரு!

கேமராவும் துரத்திக்கிட்டு வந்து ஷூட் பண்ணிகிட்டே இருக்கும்! ஆனா மணிவண்ணன் மட்டும் ‘ஜில்‘லுன்னு நிழல்ல நின்னுகிட்டு ‘குப்குப்‘புன்னு
தம்மடிச்சுகிட்டே இருப்பாரு! இதைப்பாத்த சத்யராஜுக்கு ‘எங்கியோ தப்பு‘ன்னு பட்சி
சொல்லுது! அதை ரொம்பநாள் ஆராய்ஞ்ச கவுண்டர்தான் பிச்சி பீறாய்ஞ்சுட்டாரு!

எடுக்கப்போற சீனுக்கான டயலாக் ஏதும் ‘க்ளிக்’ ஆகலேன்னா..
உடனே மணிவண்ணன் சத்யராஜை ‘ஓடுறா ராமா‘ ரேஞ்சுல விரட்டிவிட்டுட்டு..ஓரமா
நின்னு டயலாக்கை யோசிச்சுகிட்டிருப்பாராம்!

அடிக்கடி மணி இப்படி பண்றதைப் பாத்த கவுண்டமணி
சைலன்ட்டா ஒருநாள் சத்யராஜ்கிட்ட ‘‘ஆஹா! பார்ட்டி இப்பதான் தூண்டிலை
போட்டிருக்காப்ல! இனி மீன் புடிச்சு, அறுத்து கொழம்பு வெச்சு படைக்கறதுக்குள்ள ஓடி ஓடி உங்க நாக்கு அந்துபோகும்..எங் கொடலு வெந்துபோகும்!‘‘னு நொந்துபோய் சொல்ல.. அந்த லந்துக்கு யூனிட்டோட சந்துபொந்தெல்லாம் சிரிச்சதாம்!

குகை..புகை..யானை!

Thursday, June 25, 2009



சும்மா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது...யானை, ரயில், கடல்! இதுல ‘ரயில்ல போகும்போதே யானையை பாக்கலாம்‘னா..அது எம்மாம்பெரிய த்ரில்!

‘பாட்டியோட சுருக்குப்பை மாதிரி‘ பல சுவாரசியங்களை அடுக்கடுக்கான மடிப்புகள்ல அடக்கி வெச்சுருக்கற ஊட்டிக்கு ‘மலை ரயில்ல‘ ஒரு ஜாலி ட்ரிப் அடிச்சோம்.

''பாத்து போங்க..வழியில யானை கிராஸ் ஆனாலும் ஆகும்‘‘னு
ஏறும்போதே காத்துவாக்குல ஒரு வாக்கு காதுல விழுந்துச்சு. இதுபோதாதா? குளிரு அடிக்கிற மலையில களிறு பிளிறும் சத்தம் கேக்குதாங்கற எதிர்பார்ப்பால நமக்கும்
‘குளிர்விட்டுப்‘ போச்சு!
மேட்டுப்பாளையத்திலிருந்து படுகரெக்ட்டா காலை ஏழுமணிக்கு ‘ஜிவுக்‘னு கிளம்பிச்சு ரயில். முதல் வகுப்பு பெட்டியில் முன்வரிசை சீட்டு.. முகத்தை முத்தமிடற ‘ஜில்‘காத்துன்னு ‘ஃப்ரிஜ்ஜுக்குள் உக்கார்ந்த கூலிங் ஃபீலிங்!‘

‘ஜிகுஜிகு‘ன்னு ரயில் வர்றதை சட்டை செய்யாமல்..‘ஏதோ பெரிய சைஸ் சூட்கேஸ் வருதுங்கற மாதிரி‘ ட்ராக்குக்கு குறுக்கே கோழி முதல் மனுஷங்க வரை
ஜாலி நடை போட்டது செம தமாஷ். ‘‘யானை வரும்னு சொன்னாங்க. ஆனா மனுஷங்க
தான் கிராஸ் ஆகறாங்க‘‘னு டாப் கியர்ல எகிறியது நம்மோட ‘யானை ஆவல்‘.

கல்லார் ஸ்டாப்பிங்லேர்ந்து பற்சக்கரம் பொருத்திய ட்ராக்கில் ரயில் மலையேற தொடங்கிச்சு. முன்னால உக்காந்திருந்த ப்ரேக்ஸ்மேன்கிட்ட பேச்சு குடுத்தேன். ‘‘முப்பது வருஷமா இந்த ரயில்ல ஓடறேன்(!). எவ்வளவோ மனுஷங்களை
பாத்தாச்சு. எத்தனையோ மிருகங்களையும் பாத்தாச்சு‘‘ன்னார் கூலா.

லேசான ‘திடுக்‘கோட ‘‘மிருகங்களையா? அப்போ யானையெல்லாம் வருமா?’’னு இழுத்தேன். ‘‘ஆமாங்க. இந்த ட்ராக்ல பாக்காததா? குறுக்கும் நெடுக்குமா
யானைக அதுபாட்டுக்கு திரியும். ப்ச்..என்ன! நாமதான் கொஞ்சம் எச்சரிக்கையா
இருக்கணும்’‘னார் அசால்ட்டா.

உண்மைதான். நாலு ரயில் பெட்டிகளை உந்தித்தள்ளுற இன்ஜின் கடைசியா இருக்கு. முந்தி இருக்கற முதல் வகுப்பு பெட்டிக்கு முன்னே குந்தி இருக்கறவர் இவருதானே. திடீர்னு ‘ஹோ‘ன்னு சத்தம். என்னடான்னு பாத்தா..பட்டப்பகல்லயே
கும்மிருட்டான குகைக்குள்ள நுழைஞ்சு வெளியேறிச்சு ரயில்.

‘‘இங்க பாருங்க.. யானை பக்கத்துலதான் இருக்குபோல‘‘னு
‘கொலம்பஸ்‘ குரல் குடுத்து ‘கொல நடுங்க‘ வெச்சாரு ப்ரேக்ஸ்மேன். நாம இருந்த ஒட்டுமொத்த பெட்டியே ‘எப்டி சொல்றீங்க?‘‘னு எட்டிப்பாத்தது. ‘‘தோ தெரியுதே..‘லட்டு லட்டா‘(!?) சாணி! கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் போட்டிருக்குபோல’’னு ‘லைவ் ரிப்போர்ட்‘ தர..எல்லாரையும் த்ரில் தொத்திக்கிச்சு.

இதுக்கிடையில ‘‘ஹைய்யோ..எவ்ளோ குரங்குங்க பாருங்க‘‘னு ஒரு இளம் மனைவி குஷியா தாவ..‘அட..ட்ரெயினுக்கு வெளியிலுமா’னு அந்த பொண்ணோட கணவர் கூவ..இந்த ‘பொது நக்கலை‘ கேட்டு பெட்டிக்குள்ள சிரிப்பலை. காலை ஏழு
மணிக்கே ரயில் ஏறிட்டதால எல்லாருக்குமே ஆளைக்கொல்ற பசி. ‘ஹில் க்ரூவ்‘
ஸ்டாப்பிங்ல ரயில் நின்னதுமே..அங்க கிடைச்ச வடை, பிஸ்கோத்துகளை கடிச்சபடி சுடச்சுட டீ அடிச்சோம்.

கிளம்பின ரயில் திடுதிப்புன்னு ஒரு இடத்துல ப்ரேக் அடிச்சு நின்னுச்சு. எதிரே இருட்டுக்குகை. ‘என்ன ஏது‘னு விசாரிச்சா..ட்ராக்கை ஒட்டி நின்ன ஒரு
ரயில்வே மீசை ஆசாமி ‘‘குகைக்கு அந்த பக்கம் யானை நிக்குதுப்பா‘‘னு நம்ம ப்ரேக்ஸ்மேன்கிட்ட சாவகாசமா சொன்னாரு. ‘‘என்னாது.. யானை நிக்குதா‘‘னு பயணிகள் மத்தியில கேள்வி ‘எக்கோ‘ அடிச்சபடி ‘தடக் தடக்‘னு பயம் பரவிச்சு.

‘‘அட ஆமாங்க! ட்ரெயின் சத்தம் கேட்டு யானை இப்பதான் அங்கிட்டு நகர்ந்து போயிருக்குபோல. இதோ பாருங்க..அந்த யானை போட்ட சாணியிலேர்ந்து சூடா புகை போறதை!‘‘னு ‘ஆனைத்தரமா‘ ஆசாமி சுட்டிக்காட்ட..மொத்தப்
பெட்டியே எட்டிப்பாத்து வாய்ல புகைவிட்டுச்சு.

‘எந்த நொடியில யானை வெறிகொண்டு தாக்குமோ?‘‘னு எதிரே இருக்கற இருட்டு குகை வேற ஏகத்துக்கும் பீதியை கௌப்பி ‘லப்டப்‘பை எகிறவெச்சுச்சு. இந்த கலவர நிலவரம் புரியாமல் நிறையப் பேரு குகையை ‘பேக்ரவுண்டா‘ வெச்சு போட்டோக்கள் எடுத்துகிட்டுருந்தாங்க.

அப்போ சைடிலிருந்த மரங்களோட மறைவுல ‘நம்பர் ஒன்‘ போன ஒருத்தர் ‘அடிச்சுப் பிடிச்சு‘ ஓடிவர..மொத்த பயணிகளோட அடிவயித்துலயும் ‘அடுத்துப்
போறதுக்கான‘ பயம் பரபரத்துச்சு. ‘என்னாச்சு‘‘னு விசாரிச்சா..‘‘அந்த பக்கத்துல பெரிஸ்ஸா மலைப்பாம்பு ஒண்ணுக்கு..ஸாரி..ஒண்ணு போச்சுங்க!‘‘ன்னாரு ‘பாதி‘ போன பீதியோட!

‘‘எப்போ யானை வரும்? எப்போ ட்ரெயின் கிளம்பும்?’’னு சக பயணிகளும் தங்களுக்குள்ளயே ‘பய கேள்விகளை‘ வீசி பந்து விளையாடிகிட்டிருக்க.. திடீர்னு விசில் சத்தம் கேட்டுச்சு. ‘‘ஏறுங்க சார் சீக்கிரம்! யானை கௌம்புதோ
இல்லையோ..ட்ரெயின் கௌம்பிருச்சு!‘‘ன்னாரு ப்ரேக்ஸ்மேன். அதுக்குப்பிறகு வழிநெடுக கண்ணில் தட்டுப்பட்டு தொட்டுத்தொடர்ந்தது ‘சாணி தரிசனம்‘ மட்டுமே!

இப்படியாக ஊட்டி மலை உச்சிவரை நாம பாத்து ரசிச்சது..‘எக்கச்சக்கமா பரவிக்கெடந்த யானை எச்சத்தைத்தான்! ‘அடப்பாவி மக்கா..யானையை
பாக்கவே முடியாதா‘ங்கற ஏக்கத்தோடவே ஊட்டிக்குப்போய் இறங்குனதுமே யானையைப்
பாத்தேன்.. ரயில்வே ஸ்டேஷன்ல மாட்டியிருந்த ஒரு காலண்டர்ல!

விஜய் சேர்த்த சொத்து!

Monday, June 22, 2009



அருவி மாதிரி பேசற ஆளல்ல நம்ம ‘குருவி’! துருவித்துருவி கேள்வி கேட்டாலும் உருவிப்போட்ட கருவேப்பிலை மாதிரி கொஞ்சூண்டுதான் பதில் கிடைக்கும். ரெண்டுமணி நேரம் விஜய்கூட பேசினதை ஒரு துண்டுச்சீட்டுல
எழுதிரலாங்ணா!

அது ஒரு தீபாவளி! வாணவேடிக்கைகளை வானத்துல வேடிக்கை பார்த்தே ஏங்கற ஏழை மாணவர்களை ‘சிவகாசி‘க்கு கூட்டிட்டுப்போலாம்னு ஆசைப்பட்டேன். பட்டாசு தயாரிக்கற சிவகாசிக்கு அல்ல..பட்டைய கௌப்பற ‘சிவகாசி‘ விஜய்கிட்ட! அப்பவும் நான் ‘குங்குமம்’ பொறுப்பாசிரியர்.

தீபாவளிக்கு மூணுநாள் முன்னாடி..‘கில்லி‘யோட நீலாங்கரை வீட்டுக்கு பள்ளிக்கூடப் பசங்களை கூட்டிட்டுப்போனோம். வாசல்ல நின்னு வரவேற்ற விஜய்யை பார்த்ததுமே பிச்சுகிட்டு ஓடுன பசங்க ‘‘இளைய தளபதி‘ன்னு அவரை
மொச்சுகிட்டாங்க! பசங்களுக்கு பட்டாசு பாக்கெட், ஸ்வீட் பாக்ஸ்னு விஜய் அன்போட தர..பதிலுக்கு பசங்களும் கண்ணுமண்ணு தெரியாம பாசத்தைப் பொழிய..கண்ணு கலங்கிட்டாரு விஜய்!

இதை ‘பள்ளி மாணவர்களுடன் கில்லி தீபாவளி’ன்னு நேரடி
ரிப்போர்ட்டா எழுதியிருந்தேன். ‘குங்குமம்’ இதழ் கடைக்கு வந்த அதிகாலையிலேயே என் செல் முழிச்சது. எடுத்துப்பேசினால்..விஜய் குரல் ஒலிச்சது! ‘‘மேட்டர் படிச்சேங்ணா. மனசு நெகிழ்ந்து போயிட்டேங்ணா. நாளைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாங்ணா!’’னார்.
‘‘சரிங்ணா’’னேன் சந்தோஷமா!

மறுநாள் மாலை. அதே நீலாங்கரை. சலசலக்கற
கடற்கரையோரமா பளபளக்கற விஜய் பங்களா. ‘இளைய தளபதி‘யோட பர்சனல்
அறைக்குள் போறேன். ‘பனிக்கட்டியை பரப்பி ஏ.சி.யால நிரப்பி விட்ட மாதிரி‘ ஜிலீர்னு இருக்கு அந்த ரூம். எதிரே சேர்ல விஜய். உதிராத புன்னகையோட புதிராக என்னையே
பாக்கறாரு.

ஜாலி பேட்டிக்காக போன நானே ஒரு கேள்விக்குறி
மாதிரி ஆயிட்டேன். ‘சரி..இதிலிருந்தே பேட்டியை ஆரம்பிக்கலாம்’னு ‘‘எப்படி வந்துச்சு உங்களுக்கு இப்படியொரு அமைதி?’’ன்னு கேட்டேன். ‘‘சொல்லத்தெரியலீங்க. எப்பவுமே இப்படியேதான் இருக்கேன். இதுவே நிம்மதியா இருக்கு!’’ன்னு சைலன்ட்டாகிட்டார்.

‘என்னடாது..அதிரடிப்பேட்டி ஆன்மீகப் பேட்டியா மாறிடும்
போல’ன்னு சப்ஜெக்ட்டை மாத்தினேன். விஜய்யோட டேபிள்ல ஆடியோ சிஸ்டத்தை பாத்தேன். ‘‘அதிராமல் பேசற நீங்க..அதிர அதிர மியூஸிக் கேப்பீங்க போல?’’ன்னேன். உதடு பிரியாமல் சிரிச்ச விஜய் ‘‘ஆமாங்ணா! மியூஸிக்னா எனக்கு உயிர். பழசு புதுசு எந்தப்
பாட்டா இருந்தாலும் கேட்டு ரசிப்பேன்’’னு ‘நல்லபிள்ளையா‘ பதில் சொல்லி பேட்டிக்கு ‘பிள்ளையார் சுழி’ போட்டாரு.

கச்சிதமா ட்ரிம் பண்ணியிருந்த மீசையை விஜய் வருட..அப்போ அவரோட வலது கை விரல்ல ஒரு பிளாட்டினம் மோதிரம் ஜொலிச்சது. ‘‘ஸ்பெஷல்
மோதிரமா?’’ன்னு கொக்கியை போட்டேன். ‘‘அட..எல்லாத்தையும் நல்லா வாட்ச்
பண்றீங்களே’’னு சிரிச்சவர் ‘‘இது அப்பா போட்ட மோதிரம். ‘இத போட்டுகிட்டா நல்லது நடக்கும்‘னாரு. சந்தோஷமா போட்டுகிட்டேன்’‘னாரு.

இப்படி ஒருவழியா என்னென்னவோ செப்படி வித்தையெல்லாம் காட்டி ஒரு ‘ஸ்பெஷல் பேட்டி‘ எடுத்துட்டு வந்தேன். கவர்ஸ்டோரிக்கு அனுப்பற நேரம். அன்னிக்கு பாத்து ‘விஜய் உட்பட பல முன்னணி நடிகர்கள் வீடுகளில் இன்கம்டாக்ஸ் ரெய்டு’ நடந்துருச்சு. ‘கட்டுக்கட்டா கறுப்புல எடுத்தாங்க‘னு பல கட்டுக்கதைகளும் பரவிருச்சு.

இதுபோதாதா? விஜய்யோட கவர்ஸ்டோரிக்கு ‘‘கஷ்டப்பட்டு
சம்பாதிச்சது கையை விட்டுப்போகாது!’’னு ‘டைமிங்கா‘ டைட்டில் வெச்சு அனுப்பிச்சேன். உள்ளே என்ன மேட்டர்னா ‘‘விஜய் படமா? குடும்பத்தோட போய் ஜாலியா பாக்கலாம்னு மக்கள் என்மேல நம்பிக்கை வெச்சுருக்காங்கள்ல! இந்த நம்பிக்கைதான் நான் கஷ்டப்பட்டு
சம்பாதிச்ச சொத்து. இது கையை விட்டுப் போகாது!’’னு விஜய் சொல்லியிருப்பார்.

இதழ் விற்பனைக்கு வந்தது. ‘சன் டி.வி.‘யிலயும் விளம்பரம் சக்கைபோடு போட்டது. அன்னிக்கு மதியம்..என் செல்லில் மீண்டும் விஜய்! ‘‘ண்ணா..
இன்கம்டாக்ஸ் ரெய்டு பத்தி எவ்வளவோ பொய்யா எழுதி என்னை கஷ்டப்படுத்திட்டாங்க. ஆனா அதையெல்லாம் அடிச்சுத்தூக்கி என் மனசுக்கு பெரிய நிம்மதியை தந்துருச்சு உங்க எழுத்து! ரொம்ப தேங்க்ஸ்ணா. இனிமேல் என்னைப்பத்தி நீங்க என்ன எழுதினாலும் அதுக்கு முதல் ரசிகன் நாந்தாங்ணா!’’னு விஜய் உருக்கமாகப் பாராட்ட..இன்னும் நெருக்கமானது அவருடனான நட்பு!

ராஜ்கிரணின் ‘ஆட்டுக்கால் சூப்‘!

Sunday, June 21, 2009


மரிக்கொழுந்து வாசம் வேணும்னா எத்தனையோ நடிகைகளைப் பத்தி எழுதலாம். ஆனா..கறிக்கொழம்பு வாசம் வரணும்னா அதுக்கு ராஜ்கிரணைப் பத்தி மட்டும்தான் எழுதமுடியும்!

மூணுகிலோ ஆட்டெலும்பை ஒரே மூச்சுல கடிச்சுத்துப்புவாரு. முப்பதுபேரோட மூட்டெலும்பை ஒரே வீச்சுல அடிச்சு நொறுக்குவாரு. அவர்தான்
ராஜ்கிரண்! தொடைதெரிய டவுசர் மாட்டிட்டு அறிமுகமாகற கதாநாயகிகள் நடுவில..டவுசர் சைஸுக்கே வேட்டியை மடிச்சு டப்பா கட்டு கட்டிகிட்டு தொடைதெரிய அறிமுகமான ‘தமிழின் முதல் முரட்டு ஹீரோ’ ராஜ்கிரண் மட்டுமே!

ஒருகோடி ரூவா ரேஞ்சுக்கு இந்த ‘பாவா‘ சம்பளம் வாங்கி சாதனை பண்ணாரு. இவரோட சுருட்டைமுடி போல சில சோதனை சுருட்டி அடிச்சாலும்..இந்த இருட்டை விரட்டி வெளிச்சத்துக்கு மீண்டுவந்தாரு.

உலகம் மட்டுமா உருண்டை? கறி கோலாவும்தான் உருண்டை!
ராஜ்கிரணை நான் முதல்வாட்டி சந்திச்சது..திண்டுக்கல்லுல ஒரு சந்துக்கடை டிபன்
ஸ்டாலில்! தொண்டையில பிஸ்கோத்தா கரையற மட்டன் குஸ்காவும், மண்டையிலிருக்கற மசாலாவை குஷாலாக்கற சிக்கன் கறியும் அந்த கடையோட ஸ்பெஷல்!

இந்த ‘வாசனை புடிச்சாலே திண்டுக்கல் மலைக்கோட்டைக்கே எச்சில் ஊறும்ங்க! அப்போ..இலைபோட்டு திங்கற எங்க நிலைப்பாட்டை யோசனை பண்ணிப்பாருங்க! சேர்ல உக்காந்துருக்கற நானும், நண்பன் கலீலும் ஒவ்வொரு ஐட்டத்தையும் ‘ஆஹ்ஹா..ஓஹோ’னு ரசிச்சு ருசிக்க..கார்ல கூட்டாளியோட உக்காந்திருந்த
ராஜ்கிரண் வெளிய வந்து ‘‘எங் கன்னுக்குட்டிகளா..சாப்புடணும்னா இப்பிடித்தான்
சப்புக்கொட்டி சாப்பிடணும்!’’னு ‘வாசமா‘..பாசமா பாராட்ட..அப்பவே எங்களுக்கு வயிறு நிறைஞ்சுபோச்சு.

அப்புறம் நாங்க ‘பத்திரிகைக்காரங்க’ன்னு அறிமுகப்படுத்திக்
கிட்டோம். அவர் கூட இருந்த கூட்டாளி அதை அரைகுறையா கேட்டுகிட்டு
கடைக்காரர்கிட்ட ‘‘ஏப்பா..கத்திரிக்காய் கேக்கறாங்கள்ல! நம்ம பசங்க!’’ன்னு குளற..
சினிமாவுல சிரிச்சமாதிரி ராஜ்கிரண் சிரிக்க..அங்கனயே எங்களுக்கு செரிச்சுப்போச்சு!

‘இந்திரன், சந்திரன்‘ ரெண்டுபசங்களும் வெந்துகூழானதுக்கு
என்ன காரணமோ..அதே காரணத்தாலதான் நம்ம ராஜ்கிரணும் நொந்துநூலாகியிருந்தாரு! அந்த நேரத்துல நான் அவரை சந்திச்சேன். சுருட்டைமுடியும், முரட்டுமீசையும், மிரட்டும் கண்களுமா ‘சினிமாவின் மினியேச்சர் அய்யனார்’ மாதிரி இருந்தவர்..‘பிதுக்கி எடுத்த டூத்பேஸ்ட் டியூப்’ மாதிரி இளைச்சு களைச்சுப்போயிருந்தாரு!

பாக்கவே மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. அவரோட கையை இறுக்கிப்பிடிச்சுகிட்டு ‘‘இடையில கொஞ்சம் மங்கிப்போனாலும் ‘மாணிக்கம்’ சார் நீங்க! மறுபடியும் ஜொலிப்பீங்க!’’ன்னேன். ‘தளுங்’னு அவரோட கண்ணு கலங்கிருச்சு.
எனக்கும்தான்.

‘‘சந்தோஷம்யா! வருவேன்யா..வந்ருவேன்யா!‘‘னு அழுத்தமா சொன்னவரு, ‘ம்க்ர்ம்’னு தொண்டையை செருமிகிட்டே ‘‘என்ன சாப்புடறேய்யா?’’ன்னு பரிவோட கேட்டாரு. ‘‘காபி சார்’’ன்னேன். ‘என் ராசாவின் மனசுல’ மீனாவை செல்லமா கோச்சுக்கறமாதிரி’ ‘‘என்ன பழக்கம்யா? காபி கீபின்னுகிட்டு? சூடா ஆட்டுக்கால் சூப் குடிக்கலாமா?’’ன்னாரு.

‘இலை திங்கற ஆடு மாதிரி‘ தலையாட்டினேன். வீட்டுக்கு உள்ளே பார்த்து பெருங்குரலில் ‘‘தாயீ..ரெண்டு பெரிய கப்புல சூப் குடும்மா’’ன்னாரு! சுடச்சுட
வந்தது சூப். செம கமகம! ‘‘இந்தாய்யா..நல்லா உறிஞ்சி குடிய்யா’’னு மணக்க மணக்க எனக்கும் கொடுத்து..தனக்கும் எடுத்தார்.

முதல் ‘சிப்‘பிலெயே ‘‘சூப்பர் சார்’’னேன். ‘‘யய்யா..ஆட்டுக்கால் சூப் சாப்புட்டா மூட்டுவலியே வராது தெரியுமா?’’னு ‘அசையும் பொருள்கள் அத்தனைக்குமான அசைவ டிப்ஸை‘ அள்ளித்தர..அசையாம சப்புக்கொட்டி கேட்ட நான் அத்தனையையும் ‘உப்புக்கண்டம்’ போட்டு பத்திரமா வெச்சிருக்கேன்.

கிளம்பறப்போ கேட்டேன்..‘‘உங்களை ‘வில்லேஜ் எம்.ஜி.ஆர்.‘னு எல்லாரும்..குறிப்பா தாய்க்குலம் தலைமேல தூக்கிவெச்சு கொண்டாடுனாங்க! மறுபடியும் அந்த இடத்தை நீங்க புடிச்சுரலாம்ல?’’ன்னேன்.

கண்ணைமூடி தன்னைப்பத்தி ஒருநிமிஷம் யோசிச்சவர்
‘‘எல்லாரும் எம்.ஜி.ஆர். ஆகமுடியுமாய்யா? எனக்கும் எம்.ஜி.ஆர்.மாதிரி இருக்கத்தான் இஷ்டம். ஆனா ராஜ்கிரணா இருந்துட்டதாலதான் இம்புட்டு கஷ்டம்!
பொண்டுபுள்ளைக மத்தியில நமக்குன்னு ஒரு மதிப்பு இன்னமும் இருக்குய்யா. அதை
காப்பாத்திக்குவேன்!’’னார் ‘கிரானைட்‘ குரலில்!

‘சிக்ஸ்டி பேக்’ அமீர்!

Tuesday, June 16, 2009







சினேகமாகிட்டா உசுரையே தரக்கூடிய அமீர்..அநேகமா போன பிறவியில கர்ணனா பிறந்திருப்பார்போல! தப்புன்னா தொடைதட்டி மல்லுக்கு நிப்பார். நட்புன்னா படைதிரட்டி முன்னுக்கு நிப்பார்.

ரசிகர்களை மயக்குன ‘மௌனம் பேசியதே’..அமீர் இயக்குன முதல்படம். பத்திரிகைகள்ல விமர்சனம் எப்படி வரப்போகுதுன்னு பத்தி எரியற
ஆர்வத்தோட அமீர் காத்திருந்த காலம் அது. அல்லாவின் கருணையால் எல்லா பத்திரிகைகள்லயும் படத்தைப் பத்தின விமர்சனம் நல்லா வந்திருந்தது. மாநிறமா இருந்த அமீர்..இதை படிச்சு படிச்சு ரசிச்சு தேனிறமா மாறிட்டாரு!

வந்த விமர்சனங்கள்ல அமீரால மறக்கமுடியாததுல
நம்மோடதும் ஒண்ணு. ‘மௌனம் பேசியதே’ படம் பத்தி அக்குவேறு சுக்குநூறா அலசிட்டு..ஃபைனல் டச்சா ‘‘ஓடுகிற நதியில் ஒருகூடைப்பூக்கள் மிதந்துபோகிற அழகு!’’ன்னு எழுதியிருந்தேன். தனக்கு பாயாசமா இனிச்ச இந்த வரிகளை வாயாரப்பாராட்டின அமீர்..பத்திரிகை விளம்பரத்துல எடுத்துப்போட்டு மரியாதை பண்ணியிருந்தார்.

அப்போ தொடங்கின நட்பு..இப்போவரைக்கும் உப்புபோல எளிமையாவும், எஃகு போல வலிமையாவும் தொடர்வதுதான் நம்மோட லக்கு! உணர்ச்சிவசப்பட்டுட்டா கத்தரிவெயில் மாதிரி அனல்கக்கற அமீருக்கு..
பத்திரிகைகாரங்ககிட்ட கத்தரிபோட்டு பேசத்தெரியாது. இதனால இவரை ‘மகா கோபக்காரர்‘மாதிரி சித்தரிச்சிட்டாங்க!

நிஜத்துல அமீரோட பேச்சுல ஞாயம் இருக்குமே தவிர சாயம் இருக்காது. சமயங்கள்ல சிலபேர்கிட்ட அடிமனசுல பட்டதை ‘பட்‘டெனப்பேசி சர்ச்சைகள்ல அடிபட்டதுக்குப்பிறகு..நல்லது கெட்டது எதுன்னு அமீருக்கு இப்போ நல்லா புடிபட்டுப்
போச்சு.

‘பருத்திவீரன்’ படத்துல ஒரு ‘கறுப்புத்தோல் தமிழச்சியைத்தான்
கதாநாயகியா அறிமுகப்படுத்துவேன்‘னு வீறாப்பா சொல்லிட்டாரு. ‘நைட்டியைப்
போட்டும்கூட மேல மாராப்பா ஒரு துண்டைப் போட்டுக்கற‘ நம்மூரு பெண்டுக..
பிறவிச்சொத்தான வெக்கத்தை துறவி ரேஞ்சுக்கு துறந்து நடிப்பாங்களா என்ன?

தமிழ்நாட்டோட சந்துபொந்து இண்டுஇடுக்கெல்லாம் பூந்து தேடியும் நண்டு வளைக்குள்ள ஒளிஞ்சிகிட்டமாதிரி ‘கருப்புத்தோல் தமிழச்சிகள்லாம் பம்மி பதுங்கிட்டாங்க. ‘‘அப்புறம் என்ன செய்ய? பெங்களூரு தமிழச்சி ப்ரியாமணியை புடிச்சுட்டு வந்தேன். தங்கக்கட்டிக்கு தார்பூசி கறுக்கவச்சோம்’’னு சொல்லிச்சிரிச்சாரு அமீர்.

‘என்னுயிர்த்தோழா’ன்னு பாலாவோட சுத்தித்திரிஞ்ச அப்’போதை’ய காலகட்டத்துல இருந்த அமீர் இல்லை. இப்போது.. இறைநெறிகளுக்குட்பட்டு தனது மறைவிதிகளை மதிச்சு துதிக்கற நிறைவான மனிதன் அமீர்.

அமீரின் மூன்று படங்கள்லயும் கலகலப்பு இருக்கும். கிளுகிளுப்பு இருக்காது. ‘கவிச்சி‘ கடிப்பாங்க. கவர்ச்சி கிடையாது. ‘ஏன் இப்படி முரண்டு புடிக்கறீங்க?’னு கேட்டேன். கரண்டு அடிக்கறமாதிரி பதில் சொன்னாரு அமீர்...

‘‘ஏங்க..நம்ம மெரினா பீச்சுல ஒருலட்சம் பேர் வெறும்
உள்ளாடைகளோட படுத்து ‘சன் பாத்‘ எடுக்கமுடியுமா? முடியவே முடியாது. ஏன்னா நமக்குன்னு ஒரு கலாச்சார அடையாளம் இருக்குல்ல. ரெண்டு பொம்பளைப்
பிள்ளைகளைப் பெத்தவன் நான். ஒரு அக்கறையான தகப்பனா..என்னோட படங்களை என் குடும்பம் முதல்ல பாக்கனும்னு நினைக்கறேன். கோட்டை கட்டவேண்டிய
தமிழ்சினிமாவுல..திருட்டுத்தனமா ஓட்டைல மறைஞ்சுபாக்கற விஷயங்களைச்சொல்லி
நாட்டை கெடுக்காதீங்க‘‘ன்னு பேசிட்டு பாத்தவரோட கண்ணுல ஆசிட் கோபம்!

அமீரோட கவலையெல்லாம் ‘சவலைப்புள்ளையா‘ போன பல நடிகர்களைப்பத்தித்தான்..‘‘ஆளில்லாத தீவுல ‘ஊ..லலல்லா‘ பாட நம்ம ஹீரோக்கள்
ரெடியா இருக்காங்களே தவிர..அப்பா கேரக்டர்ல நடிக்க இங்க ஆளில்லை. கமல்
சாரைத்தவிர அப்பா, தாத்தா ரோல்ல நடிக்க யாரும் தயாரா இல்லை. அப்படியொரு
அப்பா கேரக்டர்ல நடிக்கத்தான் நான்லாம் நடிகனானேன். மத்த நடிகர்கள் ஹீரோயினுக்கு முத்தம் குடுக்கட்டும். நாம நிஜம்போலவே பிள்ளைகளை கொஞ்சுவோம்!’‘னார்.

சமீபத்துல ஒரு விழாவுல அமீரை சந்திச்சேன். தீட்டிவெச்ச ஈட்டி
மாதிரி ஷார்ப்பா இருந்தார். ‘‘என்ன சார்..‘சிக்ஸ் பேக்‘ ஹீரோ மாதிரி இருக்கீங்களே?‘‘ன்னேன். ‘‘நீங்கவேற! நான் போட்டிருக்கற சட்டையை கழட்டிப்பாத்தீங்கன்னா..‘சிக்ஸ் பேக்‘ என்ன..‘சிக்ஸ்டி பேக்‘கே தெரியும். அம்புட்டு எலும்புகளும் அப்பட்டமா தெரியறமாதிரி ஒல்லியாயிட்டேன்!’’னு சொல்லிச்சிரிச்சார் ‘யோகி‘ அமீர்!

சந்தியா படக்கதை!

Friday, June 12, 2009


ஆத்தா ஆடு வளர்க்கலாம். தாத்தா பேத்திய வளர்க்கலாம்.

இந்தியாவை இளைஞர்கள் வளர்க்கலாம். ஆனா..‘அம்மாளுசந்தியாவை

பத்திரிகைக்காரங்களான நம்மாளுங்க எப்படி வளர்த்தாங்க தெரியுமா?

காதல்படத்தை தலைமேல் தூக்கிவெச்சு பாராட்டினோம். அதுல அறிமுகமான சந்தியாவை அவரோட நடிப்புக்காக இடுப்புல தூக்கிவெச்சு சீராட்டினோம். ‘செண்டு பாட்டில்சைஸ்ல இருந்தாலும்..‘ரெண்டு பாட்டில் வந்து டான்ஸ் ஆடிட்டுப்போற ஆவரேஜ் நடிகை அல்லனு சாவித்திரி ரேஞ்சுக்கு கூவித்திரிஞ்சது பத்திரிகைகள்.

ஆனாலும் கோலிவுட்டோடகோலி விளையாட்டுலஉருண்டு புரண்டு சராசரி நடிகையா சந்தியா ஆயிட்டதுவழக்கம் போல் கலக்கல்தான். ‘

பத்திரிகைகளாலதான் தான் இம்புட்டு உசரத்துக்கு வந்தோம்ங்கறதால நிருபர்கள்னாலே

கும்பிட்டு பேசறது சந்தியா பழக்கம். அன்னிக்குகுங்குமம்இஷ்யூவோட டெட்லைன். அது நான் தயாரிக்கற இதழ்.

எதிர்பார்த்த ரெண்டுபக்க மேட்டர் ஒண்ணு கடைசி நிமிஷத்துல கைக்கு வரலை. பொதுவா பத்திரிகைகள்ல இந்தமாதிரி சமயங்கள்லகீப் மேட்டர்னு (அச்சச்சோ..இது அதுவல்ல!) ஒரு ஃபைல் வெச்சுருப்போம். அதுலேர்ந்து ஒரு கட்டுரையை எடுத்துப்போட்டு சமாளிச்சுருவோம். அன்னிக்கு பாத்து நமக்கு அதுவும் வசப்படலை.

எதேச்சையா என் டேபிளை பார்த்தேன். ‘அக்குள்ல கூகுள் வெச்சுகிட்டு..யாஹூல தேடறமாதிரி..மலர்போல சிரிச்சுகிட்டிருக்கற சந்தியாவோட கலர்ஃபுல் ஸ்டில் கிடைச்சது. ஆஹா..‘முக்கால் பக்கம் சந்தியா ஸ்டில்..ஒண்ணேகால்

பக்கம் ஜாலி மேட்டர்னு குஷியா விசிலடிச்சேன். மேட்டருக்கான டைட்டில் ரெடி!

ஆனா ராத்திரி எட்டு மணி. நம்ம நிருபரை அனுப்பி பேட்டி எடுக்கவும் அவகாசம் இல்லை. ஆகவே ஃபோன்லயே ஒரு பேட்டியை போட்டுருவோம்னு சந்தியாவோட செல்லுக்கு கால் பண்ணேன். எடுத்தார் சந்தியா. ‘‘ஒரு அவசர பேட்டி. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்..இதுபத்தி பேசலாமா?’’ன்னேன்.

என்னடாது..எல்..வி.. நாயகிகிட்ட எல்.கே.ஜி.ரேஞ்சுல

கேக்கறாரேன்னு நினைச்சுகளுக்னு சிரிச்ச சந்தியா ‘‘ஓகே சார்..கேளுங்க!’’ன்னார். பத்தே நிமிஷத்துலகணக்குமுடிஞ்சது. சந்தியாவுக்கோ த்ரில் தாங்கலை. ‘‘சார்..வித்தியாசமா

எதையோ கேக்கறீங்க. ஓகே. லேட்டஸ்ட்டா ஃபோட்டோசெஷன் பண்ணேன். அதுல எனக்கு ரொம்ப புடிச்ச ஒரு ஃபோட்டோ இருக்கு. அதை போடமுடியுமா ப்ளீஸ்!’’னுச்சு

பொண்ணு.

படம் நழுவி ஸ்கேனர்ல விழுந்து..அதுவும் நழுவி தாள்ல

அச்சேறின கதையாடபுள் குஷியாச்சு. உடனே நம்ம ஆபீஸ் பையன் சுரேஷை அனுப்பினேன். ‘பாயும்புலியா போன சுரேஷ்..ஃபோட்டோவை வாங்கிட்டு கூண்டுக்கிளியா

திரும்பிவந்தான். செம்பருத்திப்பூவை செருகிவெச்ச வெள்ளைத்தொப்பியும்..வெனிலா ஐஸ்க்ரீமா உருகி வழியற சிரிப்புமா சந்தியாவோட அழகான ஃபோட்டோ அது!

பிறகென்ன? ‘தேவதையின் பினாமி..இளசுகள் மனசை சூறையாடற சுனாமின்னு ஓப்பனிங் வெச்சு..‘சந்தியாவும்..சில கணக்குகளும்ங்கற டைட்டிலோட ரெண்டுபக்க மேட்டரை அனுப்பிச்சாச்சு. இஷ்யூ முடிச்சுட்டு உஷ்ஷுனு உக்காந்தேன்.

கொலைப்பசி. ஒரு பழத்தை சாப்பிட்டுகிட்டிருந்தேன்.

அப்போ பலத்த சந்தேகத்தோட கேபினுக்குள்ள வந்த சுரேஷ்..சந்தியா ஃபோட்டோவையே சந்தேகமா பாத்துகிட்டிருந்தான். ‘‘சார்..என்னால நம்பவே முடியல சார். இந்த சந்தியா

ஃபோட்டோலதான் அழகா இருக்கு. நேர்ல ரொம்ப ஏஜ்டா தெரியுது சார்‘‘னான்.

‘‘சேச்சே..சின்னப்பொண்ணுப்பா அவங்க’’ன்னேன். ‘‘உங்களுக்கு தெரியாதா சார்? எல்லாமே மேக்கப்தானே? அன்னிக்கு த்ரிஷாவ பாத்தேன். படத்துலதான் ஷோக்கா இருக்கு. நேர்ல சுதும்புக்கருவாடு மாதிரில்ல இருக்கு’’ன்னு அவனோட பாணியில போணி பண்ணான். அமைதியா இருந்தேன். அவனோ அப்பிராணியா மூஞ்சியை வெச்சுகிட்டுசந்தேகப்பிராணியாவிடாம கேட்டான்..‘‘சார்! சந்தியாவுக்கு முப்பது வயசு இருக்கும்ல சார்?’’னான்.

இப்போ எனக்கே டவுட் வந்துடுச்சு. உஷாராகி சந்தியாவுக்கே

ஃபோன் அடிச்சு விசாரிச்சேன். நடந்தது இதுதான். சுரேஷ் ஃபோட்டோ வாங்க சந்தியா வீட்டுக்கு போயிருக்கான். ‘காதல்ஹீரோயினை நேர்ல பாக்கற த்ரில்லோட காலிங்பெல்லை அடிச்சுருக்கான். கதவு திறந்தது. ‘‘உள்ளே வாங்க’’ன்னுசந்தியாகூப்பிட்டிருக்காங்க.

அப்போ அவங்க செல்ஃபோன் அடிச்சுருக்கு.

எடுத்துப்பேசினவங்க ‘‘யெஸ்..சந்தியாதான் பேசறேன். என்ன

விஷயம்?’’னு கேட்டுருக்காங்க. பேசிகிட்டே நம்ம பையன் கையில ஃபோட்டோவை

குடுத்து அனுப்பிச்சுட்டாங்க. இந்த இடத்துலேர்ந்துதான் குழப்பம் கூடுவிட்டு கூடு

பாஞ்சுருக்கு. பையன் கண்ணால கண்டது சந்தியாவோட அம்மாவை! ‘‘யெஸ்..சந்தியாதான் பேசறேன்’’னு காதால கேட்டதும் சந்தியா அம்மாவோட குரலைத்தான். இதுல என்ன ப்யூட்டின்னா..ப்யூட்டிஷியனான மம்மி அச்சுஅசல் சந்தியா மாதிரியே இருப்பாங்க!

மம்மி ஏன் சந்தியாவுக்கு டப்பிங் பேசுனாங்கன்னா..உப்புமாவை

சாப்பிட்ட கையோட உப்புமா கம்பெனியில வந்து உக்கார்ர சிலபுருடாயூஸர்கள்..

‘‘சந்தியாவோட கால்ஷீட் வேணும்’’னுடுபாக்கோவை மென்னுகிட்டேடுபாக்கூர்

விடுவாங்க. இந்தமாதிரிகிருமிகள்ஃபேன்ஸி நம்பர்லேர்ந்து ஃபோன் பண்றதால..அவங்கரியலா..ரீலான்னு பாத்து உறுமிவைப்பாங்க சந்தியாவோட மம்மி!

இப்படி சந்தியாமம்மிஅடிச்சஃபோன் கும்மியை பாத்துதான்

நம்ம சுரேஷ்இடமாறு தோற்றப்பிழையாலவிம்மிவெடிச்சுருக்கான்!

 
சுடச்சுட - by Templates para novo blogger